• Wed. Apr 24th, 2024

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு:
கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்ப்பு

குரூப் 4 தேர்வில் 7,301 பணியிடங்கள் அறிவித்த நிலையில் தற்போது 9,870 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
7301 காலிப்பணியிடங்களுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை 24ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது.
குரூப் 4 தேர்வை தமிழ்நாடு முழுவதும் 18.5 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.
இந்நிலையில், குரூப் 4 தேர்வில் 7,301 பணியிடங்கள் அறிவித்த நிலையில் தற்போது 9,870 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதி குறித்து ஜனவரி மாதத்தில் வெளியாக உள்ளன.
தேர்வர்கள் மகிழ்ச்சி:
பணியிடங்களில் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அதிகப்படியான தேர்வர்களுக்கு அரசுப் பணிக்கான வாய்ப்பு கிடைக்கப் பெறும். இதனால் கடந்த ஜூலை 24ம் தேதி தேர்வு எழுதிய தேர்வர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *