வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி கௌண்டன்ய மகாநதி ஆறு அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதை நீர்ப்பாசனம்,சட்டமன்றம்,கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவருடன் மாவட்ட ஆட்சியர் பெ.குமரவேல் பாண்டியன், செயற்பொறியாளர் சரவணன் ஏ.பி.நந்தகுமார், அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.அமலு விஜயன் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.