வைகை அணையில் இருந்து பெரியாறு பிரதான கால்வாயின் முதல் போக பாசன சாகுபடிக்கு அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் தண்ணீர் திறந்து வைத்தனர். முல்லைப் பெரியாறு – மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்தால் தேனி மாவட்டம் பாலைவனமாக மாறாது, எப்போதும் பசுமையான தேனியாகத்தான் இருக்கும். ஐ.பெரியசாமி பேட்டி.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71அடி உயர நீர்த்தேக்கக் கொள்ளளவில் அமைந்துள்ளது வைகை அணை. மூல வைகை மற்றும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கிடைக்கப் பெறும் தண்ணீரால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 5மாவட்டங்களில் உள்ள 2லட்சத்து 10ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி அடைகின்றன. மேலும் தேனி, மதுரை மாவட்டங்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் முதல் போக பாசனத்திற்கும், அக்டோபரில் இரண்டாம் போக பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதியளவு மழை இல்லாததால் முதல் போக பாசனத்திற்கே தாமதமாக வைகையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இதையடுத்து கடந்தாண்டு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்மட்டம் உயர்ந்திருந்ததால் ஜூன் மற்றும் அக்டோபரில் தண்ணீர் திறக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டிலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மூல வைகை மற்றும் முல்லைப் பெரியாறு அணை ஆகிய இடங்களில் பெய்த மழையால் வைகையின் நீர்மட்டம் உயர்ந்தே காணப்பட்டது. இந்நிலையில் வைகை அணையில் இருந்து பெரியாறு – வைகை பிரதான கால்வாயின் கீழ் உள்ள இரு போக பாசன நிலங்களின் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதனடிப்படையில் இன்று முதல் ஜூன் 2ஆம் தேதி முதல் 45நாட்களுக்கு 900கன அடி வீதமும், அதனைத் தொடர்ந்து 75நாட்களுக்கு முறைப்பாசனம் அடிப்படையில் என 120நாட்களுக்கு 6,739 மி.கன அடி தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வணிக வரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் பங்கேற்று வைகை அணையில் உள்ள 7பெரிய மதகுகளை இயக்கி தண்ணீர் திறந்து மலர் தூவி வரவேற்றனர். முன்னதாக மதகுகளுக்கு பொதுப்பணித்துறை சார்பில் சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்யப்பட்டது. இந்த தண்ணீர் திறப்பினால் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் 1,797ஏக்கரும், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவில் 16,452ஏக்கர் மற்றும் மதுரை வடக்கு வட்டத்தில் 26,792ஏக்கர் என ஆக மொத்தம் 45,041 நிலங்கள் பாசன வசதி அடைகின்றன. இந்த நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், தேனி மாவட்ட ஆட்சியர் முரளீதரன், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகாராஜன் உட்பட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தண்ணீர் திறப்பதற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு சென்ற ஆண்டைக் தொடர்ந்து இந்த ஆண்டும் வைகை அணையில் இருந்து ஜூன் முதல் வாரத்தில் பாசன தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து முல்லைப் பெரியாறு – மதுரை குழாய் வழி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு தேனி மாவட்ட மக்களின் எதிர்ப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கோடைக்கால வறட்சியின் போது மதுரைக்கு முழுமையாக குடிநீர் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக தான் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் மக்களை பாதிக்காத வகையில் தான் முதலமைச்சர் ஸ்டாலின் திட்டங்களை செயல்படுத்துவார். இதனால் தேனி மாவட்டம் பாலைவனமாக மாறாது, எப்போதும் தேனி மாவட்டம் பசுமையான மாவட்டமாக தான் இருக்கும்.
- மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம்மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் மேயர் தலைமையில் நடைபெற்றதுமதுரை மாநகராட்சி […]
- அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் மண்டல அலுவலகம் முன்பாக […]
- நுழைவு தேர்வு இல்லாமல் சென்னை ஐஐடியில் சேரலாம்எந்தவொரு நுழைவுத் தேர்வும் இல்லாமல் சென்னை ஐஐடியில் சேர அற்புதமான ஒரு வாய்ப்பு இருக்கிறது.இந்தியளவில் டாப் […]
- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!அத்துமீறி பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஆளுநர்”நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை அறிந்தும் […]
- திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகைமதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகை- […]
- பாரதி கணேஷ் 24 வருடங்கள் கழித்து இயக்கும் குழந்தைகள் படம்விஜயகாந்த், சிம்ரன், கரண் நடித்த ‘கண்ணுபட போகுதய்யா’ படத்தை இயக்கியவர் பாரதி கணேஷ். 1999ம் ஆண்டு […]
- ஆஞ்சநேயருக்கு டிக்கட் முன்பதிவு செய்த ஆதிபுருஷ் படக்குழுராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . […]
- விருதுநகர் அருகே சாலை விபத்து … நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலிவிருதுநகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த நிதிநிறுவன ஊழியர்கள் விபத்தில் சிக்கி பலியானார்கள்.விருதுநகர் […]
- ராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடம் திறப்புராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடத்தை காணொளி காட்சி மூலமாக காவல்துறை தலைமை இயக்குனர் […]
- இந்தியாவின் முதல் தபால்காரர் பற்றிய படம் ஹர்காராகலர்புல் பீட்டா மூவ்மென்ட் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில், உருவாகும் படம் ‘ஹர்காரா’. ‘வி1 மர்டர் கேஸ்’ […]
- விஐய் 68 படத்தின் பெயர் என்ன?விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து வெங்கட் […]
- தமிழகத்தில் தொடர்ந்து உயரும் அரிசி விலை : அதிர்ச்சியில் மக்கள்..!தமிழகத்தில் இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து அரிசி விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து […]
- சென்னை – இலங்கை இடையே பயணிகள் சொகுசு கப்பல் அறிமுகம்..!சென்னை – இலங்கை இடையே பயணிகள் சொகுசு கப்பல் நேற்று அறிமுகமாகி உள்ளது.மத்திய அரசின் சாகர்மாலா […]
- திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயசத்துக்கு மல்லுக்கட்டு..!திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயசத்துக்கு மல்லுக்கட்டி ஒருவருக்கொருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாகச் […]
- பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியீடு..!தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் […]