• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

துரத்திய யானை தலைதெறிக்க ஓடிய வாலிபர்..,

ByG. Anbalagan

May 5, 2025

நீலகிரி மாவட்டம் நெலாக்கோட்டை பகுதியில் இன்று காலை காட்டுயானை ஒன்று புகுந்து வாகனங்களை தாக்கியதுடன் வீடுகளையும் சேதப்படுத்தியது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யானையிடமிருந்து தப்பிக்க வாலிபர் தலைதெறிக்க ஓடும் காட்சிகளும் துரத்தி வந்த யானை ஆத்திரத்துடன் வாகனத்தில் மோதிய காட்சிகளின் சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.