• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

தப்பியோடிய வாலிபர் மீண்டும் நள்ளிரவில் கைது…

ByKalamegam Viswanathan

Jan 12, 2025

திருப்பரங்குன்றத்தை சேர்ந்த வாலிபர் நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தும் போது தப்பியோடியவர் மீண்டும் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மேலபச்சேரியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் கருப்பசாமி (வயது 23) என்பவர் ஆயுதத்தை பயன்படுத்தி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதாக போலீசார் கைது செய்தனர். வழக்கு தொடர்பாக திருப்பாலை காயத்ரி நகரில் உள்ள நீதிபதி வீட்டிற்கு ரிமாண்ட் செய்ய அழைத்து சென்றனர். நீதிபதி வீட்டருகே நேற்று இரவு கருப்பசாமி தப்பி ஓடினார். போலீசார் தேடுதல் வேட்டையில் திருப்பரங்குன்றம் பகுதியில் இன்று காலை கைது செய்யப்பட்டார்.