மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் சந்திப்பில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் பின்புறம் சாலைகள் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இது நேரு நகர் பிரதான சாலை வரை சாலையில் அமைத்து மற்றும் வாய்க்கால்களை தூர்வாரும் பணியாளர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நிதானம் இல்லாமல் அதிக அளவு மதுபோதையில் இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் சாலை இருப்பதாக நினைத்துக் கொண்டு வேகமாக அந்த வழியில் வந்துள்ளார் அப்பொழுது நிலை தடுமாறி கீழே விழுகவே உடனடியாக சுதாரித்துக் கொண்ட சாலை பணியாளர்கள் இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்த நபரை தூக்கி சாலை ஓரத்திற்கு கொண்டு வந்தனர் எனினும் அவரால் நிற்க கூட முடியவில்லை அந்த அளவிற்கு மது போதையில் இருந்து உள்ளார் மீண்டும் அவர் வாகனத்தை எடுத்து எங்கு செல்வது என்று தெரியாமல் போடி லயன் கீழே வரை சென்று எதிரே வந்த ஒரு கார் மீது மோத முயன்றார் அப்பொழுது மீண்டும் யுடன் அடுத்து காளவாசல் பகுதி வழியாக தப்பித்து சென்றார் சிறிது தூரம் தள்ளி விழுந்திருந்தால் வாய்க்காலில் விழுந்து நிச்சயம் அவருக்கு படுகாயமும் அல்லது உயிரிழப்பு ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது இது போன்ற போதை ஆசாமிகளை கண்டறிந்து காவல்துறை கூறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர் கோரிக்கையாக உள்ளது.