• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

அமெரிக்க பிரதிநிதிகள் சபையை குடியரசு கட்சி கைப்பற்றியது

ByA.Tamilselvan

Nov 17, 2022

அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில் பிரதநிதிகள் சபையை முன்னாள் அதிபர் டிரம்ப்பின் குடியரசு கட்சி கைப்பற்றியுள்ளது
அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும் செனட் சபையில் 100 இடங்களில் 35 இடங்களுக்கும் கடந்த 8-ம் தேதி இடைக்கால தேர்தல் நடந்தது. இதன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. இதில் அதிபர் ஜோபைட னின் ஜனநாயக கட்சி செனட் சபையை கைப்பற்றியது. பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையை பெற 218 இடங்கள் தேவை. பிரதிநிதிகள் சபை தேர்தல் முடிவு வெளியானபோது ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி இடையே சிறிய அளவில் வித்தியாசம் மட்டும் இருந்தது. இதில் குடியரசு கட்சி தொடர்ந்து முன்னிலையில் இருந்தது. இந்தநிலையில் பிரதிநிதிகள் சபையை முன்னாள் அதிபர் டிரம்ப்பின் குடியரசு கட்சி கைப்பற்றியது.