• Wed. May 13th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

கோவை விமான நிலையத்தில் தரை இறங்கிய விமானம்

BySeenu

May 14, 2024

கேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் மோசமான வானிலை – கோவை விமான நிலையத்தில் தரை இறங்கிய விமானம்.

கேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் மோசமான வானிலை காரணமாக அங்கு செல்லக்கூடிய இரண்டு விமானங்கள் கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

கேரளா மாநிலம் கோழிக்கோட் கரிப்பூரில் சர்வதேச விமான நிலையம் உள்ளது.அங்கிருந்து வெளிநாடு, மற்றும் வெளி மாநிலங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை என்பது டேபிள்டாப் என்ற அமைப்பின்படி அமைக்கப்பட்டுள்ளது.அதாவது இங்கு உள்ள ஓடு பாதை என்பது குறுகிய தொலைவுதான் இருக்கும்.அந்தக் குறுகிய தொலைவுக்குள் விமானத்தை டேக் ஆஃப் செய்யவும், லேண்டிங் செய்யவும் விமானிக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும்.

இப்படிபட்ட இந்த விமான நிலையத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு மோசமான வானிலை , மற்றும் மழைப்பொழிவு இருந்தபோது விமானத்தை தரை இறக்கியதால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி பயணிகள் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் நேற்றய தினம் முதல் கேரளாவில் மலைப்பொழிவுடன் மோசமான வானிலை இருந்துள்ளது. இன்று காலை மிகவும் மோசமான வானிலை இருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று காலை துபாய் மற்றும் தாமாமில் இருந்து வந்த இண்டிகோ விமானங்கள் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறக்கபடாமல் கோவை விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டு தரையறுக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து வானிலை சீராக இருக்கும் பட்சத்தில் மீண்டும் கோழிக்கோட்டுக்கு இந்த விமானங்கள் பயணிகளுடன் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.