மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அயன்மேட்டுப்பட்டி, வகுராணி, சந்தைப்பட்டி, கள்ளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் விவசாயிகள் கோழி கொண்டை பூக்கள் மற்றும் செண்டு பூக்கள் நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ள பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.,

இந்நிலையில் கோழி கொண்டை, செண்டு பூக்களின் விலை கிலோ ரூ10 முதல் ரூ 20 வரை உசிலம்பட்டி மலர் சந்தையில் விற்பனையாகின்றன எனவும்.,
இன்னும் இரண்டு தினங்களில் மகா சிவராத்திரி மாசி பச்சை திருவிழா உசிலம்பட்டி பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்படுகின்ற சூழலில் பூக்களின் விலை உயரும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.,










