குடியரசுத்தலைவரின் பதவி காலம் நிறைவடைய உள்ளது.இதையடுத்து யார் அடுத்த குடியரசுத்தலைவர் வேட்பாளர் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த பட்டியலில் தமிழிசை செளந்தரராஜன் பெயர் தான் முதன் முதலில் அடிபட்டது.ஆனால் அதற்குள் அவருக்கு இரண்டு மாநில ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளூர் குழாயடி சண்டை நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு நடுவே தமிழகத்தில் இருந்து மேலும் ஒரு ஆளுநர் உருவாகிறார் என்று நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.
தெலங்கானாவில் நடக்கும் பிரச்சனையை தனி ஒருவராக தமிழிசையால் கையாள முடியவில்லை. அதனால் அவரை புதுச்சேரியை மட்டும் கவனிக்க சொல்லிவிட்டு தெலங்கானா மாநிலத்திற்கு பொன்.ராதாகிருஷ்ணனை ஆளுநராக நியமிக்க லாம் என்ற பேச்சு அடிபட்டதாம். ஆனால் அந்த வாய்ப்பை பொன்னார் மறுத்துள்ளதாகவும் , பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பலமுறை வற்புறுத்தியும் இதற்கு அவர் சம்மதிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அந்த வாய்ப்பு தற்போது அத்தி பூத்தது போல முன்னாள் பாஜக
தேசிய செயலர் ஹெச்.ராஜாவிற்கு அடித்துள்ளது. இவர் தான் தற்போது ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த முறை பாஜகவின் பிளான் வேறு குடியரசுத்தலைவர் வேட்பாளர் எப்படி இருக்கவேண்டும் என்ற திட்டம் ஏற்கனவே பாஜகவிடம் உண்டு. அந்த வகையில் தாங்கள் முஸ்லிம்களுக்கு , தலித் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை அடிக்கடி மக்களிடம் உணர்த்த முயற்சி செய்தது. குடியரசுத்தலைவராக ராம்நாத் கோவிந்தை நியமனம் செய்தது. மத்தியஅமைச்சரவையில் எல்.முருகனை அமைச்சராக்கியது என பல விஷயங்களை முன் வைக்கிறது. அது போல தான் இந்த முறை முஸ்லிம் வேட்பாளரை நிறுத்த பாஜக முன் வந்துள்ளது. முஸ்லிம் வேட்பாளரை முன்மொழிந்தால் எதிர்கட்சிகள் எப்படி எதிர்க்கும் , அப்படி எதிர்த்தால் அவர்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் என்று ஒரு அரசியல் செய்யவும் பாஜக திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானை அடுத்த குடியரசுத்தலைவராக நியமிக்க பாஜக ஒரு திட்டம் வைத்துள்ளது.பாஜகவால் நியமிக்கப்பட்டவர்.சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்று வந்துள்ளார். இது போன்ற ஆட்களை தான் பாஜக விரும்புகிறது. இந்நிலையில் ஆரிப் முகமது கானின் ஆளுநர் இடம் காலியாகும் பட்சத்தில் அந்த இடத்திற்கு தான் தமிழகத்தில் இருந்து பாஜகவை சேர்ந்த ஹெச்.ராஜாவை நியமனம் செய்ய திட்டமிடபட்டுள்ளதாக தகவல்.

- நலம் விசாரித்த அனைவருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றிமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்த் தன்னை நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு […]
- புரோட்டா கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்மதுரையில் உள்ள பிரபல பன் புரோட்டா கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.மதுரை மாவட்டம் […]
- மதுரையில் வணிகவரித்துறை அமைச்சரைக் கண்டித்து..,
அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..,மதுரையில் வணிகவரித்துறை அமைச்சரை கண்டித்து 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது […] - விவசாயப் பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்த நடவடிக்கை ” அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்பாரம்பரிய நெல் வகைகளை சந்தைப்படுத்தலில் எனக்கே சவால்கள் உள்ளதாகவும், விவசாயப் பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்த […]
- அதிமுக தற்போது டெல்லியின் அடமான திமுகவாக உள்ளது -கி.வீரமணிமதுரை ஆதினமாக போன்றோர் ஆதினமாக உலவ காரணம் திராவிடம் தான், அதிமுக அம்மாவின் கொள்கையவே மறந்து […]
- மும்பையிலும் 144 தடை உத்தரவு அமல்..மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் இன்று முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக வெளியானது. இந்நிலையில் மகாராஷ்டிர […]
- ஓபிஎஸ்-ஐ அவமரியாதை செய்ய எந்த உள்நோக்கமும் இல்லை- ஜெயகுமார்ஓபிஎஸ்-ஐ அவமரியாதை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் யாருக்கும் கிடையாது என ஜெயகுமார் தெரிவித்தார். அதிமுக […]
- ஜூலை 11ல் அ.தி.மு.க பொதுக்குழு என்பது கனவு மட்டுமேஅதிமுகவின் பொதுக்குழு ஜூலை 11ல் கூடுவது என்பது கனவாக மட்டுமே இருக்கும் என அதிமுக செய்தி […]
- 27-ந்தேதி காங்கிரஸ் போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்புதமிழகம் முழவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் வரும் 27ம் தேதி போராட்டம்தமிழக காங்கிரஸ் தலைவர் […]
- கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ1000 வழங்க சிறப்புமுகாம்கலைக்கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க சிறப்பு முகாம்அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் […]
- 2 மாநிலமாக பிரித்து தமிழகத்தை கைப்பற்ற பாஜக புதியதிட்டம்தமிழகம் 2 மாநிலமாக பிரிக்கப்படுமா என பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. […]
- இளைஞர்கள் விடும் கண்ணீர் மோடியின் கர்வத்தை உடைக்கும்!இந்திய இளைஞர்களின் கண்ணீரில் இருந்து வரும் நிராகரிப்பு உணர்வு பிரதமர் நரேந்திர மோடியின் கர்வத்தை உடைக்கும்” […]
- இனி சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் குழந்தைகள் நடிக்கத் தடை..,
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அதிரடி..!குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி, இனி சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் மூன்று மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை […] - நித்தியானந்தாவின் அடுத்த அதகளம் ஆரம்பம்..!லு’ இந்த நகைச்சுவைக் காட்சியை எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்த நகைச்சுவையைப் போலவே, சர்ச்சையின் […]
- ஊட்டியில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க..,
மரங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி..உதகையில் உள்ள மார்லிமந்து அணைப் பகுதியில் உலா வரும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் […]