மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பிளஸ் ஒன் மாணவிகளுக்கு, தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை தலைமை வகித்தார்.
இப்பள்ளியில் பயின்று வரும் பிளஸ் ஒன் மாணவிகள் 409 பேருக்கு,திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், இலவச சைக்கிளை வழங்கி பாராட்டி பேசினார். இவ்விழாவில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஜெயராமன் மற்றும் ஏராளமான திமுக கவுன்சிலர்கள் பங்கு பெற்றனர்.