

டெல்லியில் கார்கேவை தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்தித்து, கே.எஸ்.அழகிரி மீது புகார் எழுப்பியதாக கூறப்படுகிறது.
டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்கள் நேற்று மாலை சந்தித்து பேசி உள்ளனர். அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது அவர்கள் பல்வேறு புகார்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. தமிழக காங்கிரசில் தற்போது கோஷ்டி பூசல் நிலவி வருகிறது. கடந்த 15-ந் தேதி நடைபெற்ற கட்சி வளர்ச்சி சம்பந்தமான ஆலோசனை கூட்டத்தில் நெல்லை மாவட்ட தலைவர் நியமனம் தொடர்பாக மாநில தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தினர். இதில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் மீது புகார் கூறப்பட்டது. அவருக்கு ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்திரா காந்தி பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் இரு அணியாக சென்று இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். இது காங்கிரசில் மட்டுமல்லாது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் திடீரென சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டனர். அவர்கள் கே.எஸ்.அழகிரி மீது புகார் கொடுக்க சென்றதாக கூறப்பட்டது. இதற்கிடையே நேற்று மாலை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தமிழக மூத்த தலைவர்கள் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு கார்கேவின் இல்லத்தில் நடைபெற்றது. அப்போது, தமிழக காங்கிரசில் தற்போது நிலவும் கோஷ்டி பூசல் பற்றியும், இதற்கெல்லாம் நெல்லை மாவட்ட தலைவரை நியமித்ததில் கே.எஸ்.அழகிரி பாரபட்சமாக செயல்பட்டதே காரணம் என்றும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி அவர்கள் பேசியதாக தெரிகிறது. கட்சி தொடர்பான மேலும் சில விஷயங்களையும் அவர்கள் தலைவரிடம் தெரிவித்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பிப்ரவரி 8-ந் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். காங்கிரஸ் கட்சி என்றாலே கோஷ்டி பூசலுக்கு பஞ்சம் இருக்காது என்று கூறப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்றது முதல் கடந்த 15-ந் தேதி வரை எந்தவிதமான கோஷ்டி பூசலும் இல்லாமல் அனைவரையும் ஒருங்கிணைத்து மிகவும் சாதுரியமாக செயல்பட்டு வந்தார். இதனை அண்மையில் நடைபெற்ற கே.எஸ்.அழகிரியின் பிறந்தநாள் விழாவில், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மிகவும் பெருமையுடன் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீர் கோஷ்டி பூசல் ஏற்பட்டு, முன்னாள் தலைவர்கள் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- வரலாறு படைத்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!உத்தராகண்ட்: உத்தரகாசி சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
- இந்தியாவில் முதன் முறையாக கோவையில் “பிக்ட்சர் மேனுஃபேக்சரிங்” அதிநவீன தொழில்நுட்பம்…உலக அளவில் ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முதலீடுகள் சீனாவை விட இந்தியாவுக்கு அதிகம் வந்துகொண்டிப்பதாக ஜப்பானை… Read more: இந்தியாவில் முதன் முறையாக கோவையில் “பிக்ட்சர் மேனுஃபேக்சரிங்” அதிநவீன தொழில்நுட்பம்…
- இருசக்கர வாகனத்தில் கார் மோதி, கூலி தொழிலாளி உயிரிழப்பு…மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலபட்டி காளவாசல் அருகில் உசிலம்பட்டியிலிருந்து நக்கலப்பட்டி நோக்கி சென்ற இருசக்கர… Read more: இருசக்கர வாகனத்தில் கார் மோதி, கூலி தொழிலாளி உயிரிழப்பு…
- மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு.., போலீசார் விசாரணை…மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில் பாப்பாகுடியை சேர்ந்தவர் காசி விஸ்வநாதன். இவரது… Read more: மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு.., போலீசார் விசாரணை…
- குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்…மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே முதலைக்குளம் ஊராட்சி கீழப்பட்டி கிராமத்தில் சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக… Read more: குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்…
- பாரத மொழிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள்.., ஈஷா ‘இன்சைட்’ நிகழ்ச்சியில் ஓலா நிறுவனர் ஆலோசனை…“சாமானிய மக்களும் தங்களுடைய அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பாரத மொழிகளில்… Read more: பாரத மொழிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள்.., ஈஷா ‘இன்சைட்’ நிகழ்ச்சியில் ஓலா நிறுவனர் ஆலோசனை…
- ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவைக்கு ரூ.269 கோடியில் ஒப்பந்தம்..!சென்னையில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகள் கொண்ட 10 மெட்ரோ ரயில்களை உருவாக்க ரூ.269… Read more: ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவைக்கு ரூ.269 கோடியில் ஒப்பந்தம்..!
- குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பு..!தெற்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு… Read more: குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பு..!
- குனியமுத்தூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பு.., குற்றங்களில் மூவர் கைது…கோவை குனியமுத்தூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்ட கேரளாவில் பதுங்கி இருந்த மூவர்… Read more: குனியமுத்தூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பு.., குற்றங்களில் மூவர் கைது…
- மதுரையில் எம்எல்ஏ நிகழ்ச்சியில் எம்ஜிஆர் பாடலுக்கு நடுத்தெருவில் போதையில் உற்சாகமாக நடனமாடிய அதிமுக தொண்டர்..,மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட கருவேலம்பட்டியில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை போடுவதற்கும் மற்றும்… Read more: மதுரையில் எம்எல்ஏ நிகழ்ச்சியில் எம்ஜிஆர் பாடலுக்கு நடுத்தெருவில் போதையில் உற்சாகமாக நடனமாடிய அதிமுக தொண்டர்..,
- அம்மாவை ஸ்டாலின் பாராட்டியது அரசியல் உள்நோக்கம் உள்ளது.., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு…
- ஈஷாவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாய களப் பயிற்சி…ஈஷாவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாய களப் பயிற்சி 10 நாட்கள் இலவசமாக நடைபெற்றது.… Read more: ஈஷாவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாய களப் பயிற்சி…
- மான்போர்ட் சிபிஎஸ்இ பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு… மரக்கன்றுகள் வழங்கி போக்குவரத்து விழிப்புணர்வு…சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே உள்ள மான்போர்ட் சிபிஎஸ்இ பள்ளி பள்ளியில் சாலை பாதுகாப்பு விதிமுறைகள்… Read more: மான்போர்ட் சிபிஎஸ்இ பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு… மரக்கன்றுகள் வழங்கி போக்குவரத்து விழிப்புணர்வு…
- சர்பாசி சட்ட விவகாரம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்…சர்பாசி சட்ட விவகாரத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்தும் RBL வங்கி நிர்வாகத்தை கண்டித்தும் கோவை… Read more: சர்பாசி சட்ட விவகாரம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்…
- புகைப்படக் கண்காட்சி:மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல்கேபி நகர் அரசு நடுநிலைப் பள்ளியும் சிடார் மையமும்… Read more: புகைப்படக் கண்காட்சி: