இந்தியாவில் கலைத்துறைக்கான 68வது தேசிய விருதுகள் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது.
இந்த நிலையில் நேற்று (செப்.30) கலைத்துறைக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் சூர்யா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் பெற்றுக் கொண்டார்.
அதேபோல் , சூரரைப் போற்று படத்திற்காக, சிறந்த படத்திற்கான விருதை தயாரிப்பாளர் ஜோதிகா பெற்றுக் கொண்டார்.தொடர்ந்து, சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு 3 விருதுகளும், மண்டேலா படத்திற்கு 2 விருதுகளும் வழங்கப்பட்டது.