• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் சூரசம்காரம்

ByKalamegam Viswanathan

Nov 7, 2024

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று மாலை 6 மணிக்கு சூரசம்கார நிகழ்ச்சிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக காவல்துறை சார்பில் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதற்படை வீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி விழா கடந்த 2ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

காப்பு கட்டிய பக்தர்கள் கடந்த ஆறு நாட்களாக கோவில் வளாகத்தில் தங்கி விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

கந்த சஷ்டி விழாவான இன்று சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது சூரனை வதம் செய்வதற்காக தாய் கோவர்த்தனாம்பிகையிடமிருந்து சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதனை தொடர்ந்து இன்று சன்னதி தெருவில் சொக்கநாதர் கோவில் அருகே சூரனை வதம் செய்யும் சூரசம்கார நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு நடைபெறும்.

சூரனை வதம் செய்வதற்காக சிவப்பு நிற பட்டாடை அணிந்து மயில் வாகனத்தில் அமர்ந்து காட்சியளிப்பார்.

மாலை நான்கு முப்பது மணி அளவில் கோவிலில் இருந்து புறப்பட்டு ரதவீதிகளை ஊர்வலமாக வந்து சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு எழுந்தருள்வார்.

தொடர்ந்து ஸ்தானிக்கப்பட்டர் சூரசம்ஹார லீலைகள் குறித்து பக்தர்களுக்கு எடுத்துரைப்பார் இதை தொடர்ந்து வீரபாக தேவருடன் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி மிக விமர்ச்சையாக நடைபெறும்.

கந்த சஷ்டி விழாவை காண திருப்பரங்குன்றம் மட்டுமல்லாது மதுரை திருமங்கலம் சோழவந்தான் உசிலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும்
கந்த சஷ்டி நாளான இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் கோவிலில் அலை மோதியது இந்நிலையில் சூரசம்ஹார வேலையை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால்சன்னதி தெருவில் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு தடுப்புகளுக்குள்ளேமக்கள் அமர்ந்து சூரசம்ஹார லீலையை காணுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாலை நான்கு மணி முதல் பக்தர்கள் சன்னதி தெருவிற்கு வருவார்கள். இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டுள்ளது.