குருவிக்கார சமூகமும், குறவர் இனமும் வேறு என்பதை தெரியப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று தேமுதிக பொதுச் செயலாளர் கேப்டன் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். இனத்தின் பெயராலோ அல்லது சாதியின் பெயராலோ எவர் ஒருவரும் பாரபட்சத்துடன் நடத்தப்படக் கூடாது என்பதை இந்திய அரசமைப்பின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகவே வரித்து கொண்டுள்ளது.
ஆனாலும், இன்னும் அது முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை.. அதேசமயம், நரிக்குறவ சமூகத்தவர்கள் ஓரிடத்தில் நிலையாகத் தங்காமல் நாடோடி வாழ்க்கை முறையைக் கொண்டவர்கள் என்பதால், அவர்களுக்கு பிரதான இடங்களில் பங்களிப்பும் முக்கியத்துவமும் இல்லாமல் உள்ளது.
இதற்கு திமுக அரசுதான் ஒரு முடிவு கட்டி வருகிறது.. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாமல்லபுரத்தை ஒட்டியுள்ள பூஞ்சேரி கிராமப்பகுதியில் உள்ள நரிக்குறவர் மக்கள் குடியிருப்புகளுக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தார் முதல்வர்.. இச்சமூகத்தினருக்கான உரிமைகள், சலுகைகளை அறிவித்தும், அவர்களின் வீடுகளுக்கு திடீரென விசிட் அடித்தும் உணவருந்தியும் அந்த சமுதாயத்தின் மக்களின் மனதில் பாலை வார்த்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின்..
இப்படிப்பட்ட சூழலில்தான் விஜயகாந்த்துக்கு திடீரென ஒரு டவுட் வந்துவிட்டது.. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கிய கோரிக்கை வைத்துள்ளார். அது இதுதான்: “குருவிக்காரர் சமூகமும் குறவர் இனமும் வேறு என்பதை உலகறிய செய்வதுடன் அவர்களுக்கான நலத் திட்டங்களையும் தமிழக அரசு வழங்கிட வேண்டும். தமிழ் கடவுளான முருகனின் மனைவியாக அறியப்படும் குறவர் மகள் வள்ளியின் வம்சாவழிகளாக குறவர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் உள்ளனர்.இப்படிப்பட்ட சூழலில்தான் விஜயகாந்த்துக்கு திடீரென ஒரு டவுட் வந்துவிட்டது.. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்டகிய கோரிக்கை வைத்துள்ளார். அது இதுதான்: “குருவிக்காரர் சமூகமும் குறவர் இனமும் வேறு என்பதை உலகறிய செய்வதுடன் அவர்களுக்கான நலத் திட்டங்களையும் தமிழக அரசு வழங்கிட வேண்டும். தமிழ் கடவுளான முருகனின் மனைவியாக அறியப்படும் குறவர் மகள் வள்ளியின் வம்சாவழிகளாக குறவர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் உள்ளனர்.
மராட்டிய பிராந்தியத்தில் இருந்து தமிழகத்திற்கு புலம்பெயர்ந்து ஊசிமணி, பாசிமணி விற்கும் குருவிக்காரர் மக்களைக் குறவர் என்று அடையாளப்படுத்துவது முறையல்ல. பழந்தமிழ் வரலாற்றுக்கு சொந்தக்காரர்களான குறிஞ்சி நிலத்து குறவர் சமுதாயத்தின் தலைமுறைகள், அவர்களது சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழும் நிலை உருவாகியுள்ளது. குருவிக்கார சமூகத்தை பட்டியல் இனத்தில் இணைப்பதை தேமுதிக வரவேற்கிறது.
அதேசமயம் குருவிக்காரர் மக்களைக் குறவர் என்று அடையாளப்படுத்துவதன் காரணமாக குறவர் சமுதாயத்தினர் அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் சலுகைகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே குறவர் சமுதாயத்திற்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகவும் அவர்களின் இன அழிப்பு செய்வதை தடுக்கும் பொருட்டும், குருவிக்கார சமூகத்தையும் குறவர் இனத்தையும் வேறுபடுத்தி உலகறிய செய்வதுடன் அவர்களுக்கான நல திட்டங்களையும் தமிழக அரசு வழங்க வேண்டும்” என வலியுறுத்தி இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளார் விஜயகாந்த்.

- மதுரையில் பாஜக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .மதுரை […]
- சிவகாசி சிறுமி, தற்கொலைக்கு காரணமான வாலிபருக்கு, வாழ்நாள் சிறைவிருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த சிறுமி, தற்கொலைக்கு காரணமான வாலிபருக்கு, வாழ்நாள் முழுவதும் சிறை […]
- வாடிப்பட்டியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலைய முன்பாக வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பாக உயர் நீதிமன்ற […]
- திருப்புவனம் அருள்மிகு புஷ்பனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன்கோயிலில் பங்குனி உற்சவ விழாசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன் பங்குனி உற்சவ விழாவில் 71 வது […]
- உதகை காபிஹவுஸ் சதுக்கத்தில் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்அதிமுக பொதுக்குழு குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று உதகை காபிஹவுஸ் சதுக்கத்தில் அதிமுகவினர் நடனமாடி, பட்டாசு […]
- மதுரையில் பெண்குழந்தை விற்பனை -மூன்று பெண்கள் சிக்கினர்மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண்குழந்தை விற்கப்பட்டதாக மூன்று பெண்களை பிடித்து போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.ஆரப்பாளயத்தில் […]
- விருதுநகர் நகர் அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுபேற்றுக்கொண்டதை முன்னிட்டுவிருதுநகரில் நகர அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி […]
- சேலம் ஊமகவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டுவிழாஅரை நூற்றாண்டுக்கும் மேலாக இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் முதல் முறையாக ஆண்டுவிழா நடைபெற்ற நிகழ்வு […]
- திருவில்லிபுத்தூரில், வனத்துறை மோப்ப நாய் உயிரிழப்பு…விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்தில் இருந்த மோப்ப நாய், வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது. […]
- நத்தம் கோவில் திருவிழாவில் ஆண்கள் பங்கேற்கும் கறிவிருந்து..!நத்தம் அருகே உள்ள வேட்டைக்காரன் கோவிலில் வருடந்தோறும் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளக்கூடிய கறிவிருந்து திருவிழா […]
- அதிமுக மதுரை மாநகர் சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்பொதுச் செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி- மதுரை மாநகர் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி […]
- மதுரை குருவிக்காரன் சாலையில் ஒரு சம்மர் ஸ்பாட்..!தமிழகம் முழுவதும் சில இடங்களில் கோடை வெயிலின் தாக்கம் சதம் அடித்து வரும் நிலையில், மதுரையில் […]
- நெல்லையில் இருகைகளால் திருக்குறளை எழுதி அசத்திய மாணவி..!நெல்லையில் மாணவி ஒருவர் இருகைகளாலும் திருக்குறளை எழுதி சாதனை படைத்திருப்பது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.திருநெல்வேலி மாவட்டம் […]
- ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கூண்டோடு கலைப்பு..!பா.ஜ.க.வின் உட்கட்சிப் பூசலால், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் கலைக்கப்பட்ட சம்பவம் அக்கட்சியில் புயலை ஏற்படுத்தியுள்ளது.தமிழக பாஜகவில் […]
- மதுரையில் சொகுசு காரை அடித்து நொறுக்கிய ஆறு பேர் கைது..!மதுரையில் உள்ள மதுபானக்கடை முன்பு நிறுத்தியிருந்த காரை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய ஆறு பேர் கைது […]