• Tue. May 26th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை…

“பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறை…” School Is Not Safety என எழுதி வைத்து சென்னையை அடுத்த மாங்காட்டில் பாலியல் தொல்லை காரணமாக 11ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாங்காடு சக்தி நகரை சேர்ந்த 17 வயது மாணவி, பூவிருந்தவல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த மாணவி, பெற்றோர் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து போன நந்தினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த சில தினங்களாக நந்தினி தனக்கு நெருக்கமான தோழிகளிடம் பேசாமல் புதிய தோழிகளிடம் பேசியதாகவும் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இவர் எழுதிய ஒரு கடிதம் ஒன்று சிக்கியது. அதில்,அதில், Stop sexual Harrasment…. இதுக்கு மேலே முடியாது. மனசு ரொம்ப வலிக்குது, பாலியல் தொல்லை தாங்க முடியவில்லை எனக்கு ஆறுதல் சொல்ல கூட யாருமே இல்லை. என்னால நிம்மதியா தூங்க முடியல. அந்த கனவு வந்து தொல்லை பண்ணுது. படிக்க முடியல. இந்த சமூகத்தில் பாதுகாப்பே இல்லை. என்னோட கனவும் எல்லாம் போய்டுச்சி. எவ்வளவு வலி. எனக்கு நியாயம் கிடைக்கும் என நினைகிறேன். உறவினர்கள், ஆசிரியர்கள் யாரையும் நம்பாதீங்க.. அம்மா போய்ட்டு வரேன் இன்னொரு உலகத்துக்கு… பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறை.. School is also not safety and fucking relatives and more.. Justice for me” என எழுதப்பட்டுள்ளது.

பள்ளியில் மாணவிகள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்களுக்கு தீர்வு காண புகார் பெட்டிகள் அமைக்கப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.ஆனால் இது போன்ற வெறும் புகார் பெட்டிகள் மற்றும் தீர்வு தராது என்பதை இந்த மாணவியின் இறப்பு கடிதம் உணர்த்தி உள்ளது.