• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரையில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் துவக்கம்

Byp Kumar

Feb 18, 2023

மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரி சார்பாக மாநில அளவில் குத்துச்சண்டை போட்டிகள் மாணவ மாணவிகளுக்கு துவக்கப்பட்டது.
சேது பொறியியல் கல்லூரியும் விருதுநகர் மாவட்ட அமைச்சூர் மற்றும் ப்ரொபஷனல் குத்துச்சண்டை சங்கம் சார்பாக இப்போட்டிகள் நடத்தப்படுகிறது. துவக்க விழாவிற்கு கல்லூரி தலைவர் மற்றும் நிறுவனர் எஸ் .முகமது ஜலில் தலைமையில் நிர்வாக முதன்மை அலுவலர் எஸ். எம். சீனி முகைதீன் ,இணை முதன்மை நிர்வாக அலுவலர் எஸ் .எம் சீனி முகமது அலி யார் நிர்வாக இயக்குனர்கள் எஸ் .எம் நாசியா பாத்திமா நிலோபர் பாத்திமா ,முதல்வர் செந்தில்குமார், தமிழக மாநில குத்துச்சண்டை கழக பொதுச் செயலாளர் பிரித்திவிராஜ் சிறப்பு விருந்தினராக உடற்பயிற்சி இயக்குனர் மற்றும் தேசிய மாணவர் காவல்படை இயக்குனர் காட்வின்வேதநாயகம்ராஜ்குமார் ,குத்துச்சண்டை பயிற்சியாளர் பகத்ராஜ் துவக்கி வைத்தனர் .

இதில் நான்கு பிரிவுகளில் சப் ஜூனியர் ஜூனியர், யூத் பிரிவு ,சீனியர் பிரிவு 400 வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர் . இதில் ஒவ்வொரு பிரிவிலும் மூன்று பரிசுகள் வழங்கப்பட உள்ளது. சீனியர் பிரிவில் 7 ஆண்களும் ஆறு பெண்களும் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் உத்தர பிரதேஷ் மாநிலத்தில் ரைப்பிலரி நடக்கும் தேசிய குத்துச்சண்டை போட்டியில் தமிழகம் சார்பாக கலந்து கொள்ள உள்ளனர். மற்றும் மற்ற பிரிவுகளில் தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு வெற்றி பெற்றவர்கள் செல்ல உள்ளார்கள். இன்று நடைபெற்ற துவக்கவிழாவில் கல்லூரி செய்தி தொடர்பாளர் மற்றும் கணிதத் துறை தலைவர் லட்சுமணராஜ் மற்றும் நடுவர்கள் கலந்துகொண்டனர்.