மதுரை மாவட்டம் கச்சைக்கட்டி வட்டாரத்திற்குட்பட்ட வாடிப்பட்டியில் உள்ள தாய் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பாக நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் சுகாதார துறை துணை இயக்குநர் குமரகுருபரன், இணை இயக்குநர் செல்வராஜ் வாடிப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் Dr.ஹரிஷ்நிர்மல்குமார் அரசு இராஜாஜி மருத்துவமனை டீன் அருள்சுந்தரேஸ், நுரையீரல் துறை (TB) துணை இயக்குநர் ராஜசேகரன் தொழுநோய் பிரிவு துணை இயக்குநர் விஜயன் குடும்ப நலன் துணை இயக்குநர் நடராஜன், NHM செந்தில்னேஷ், கச்சைகட்டி சுகாதார நிலைய மருத்துவர் பூர்ணிமா மருத்துவம் அல்லா மேற்பார்வையாளர் ராஜரத்தினம் முதன்மை மருத்துவ அலுவலர் சாந்தி துணை சுகாதார நிலைய தலைமை மருத்துவர்கள் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் சமுதாய சுகாதார செவிலியர் நித்யகல்யாணி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செல்வராஜ், அலுவலர்கள் கருப்பசாமி சுந்தரமூர்த்தி கண்ணன் சிவசந்திரன் சரவணன் ஜெயக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தெரசா வாடிப்பட்டி பேருராட்சி தலைவர் பால்பாண்டி சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பேரூராட்சி செயல் அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் கண் இதயம் பொது மருத்துவம் குழந்தை வளர்ச்சி மகப்பேறு மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ் வழங்குதல்,அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மருத்துவம் மகளிர் மருத்துவம் மனநல மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் சித்த மருத்துவம் நீரிழிவு நோய் மருத்துவம் உட்பட அனைத்து விதமான மருத்துவம் சம்பந்தமான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் கச்சைகட்டி வாடிப்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.