சென்னை அருகே மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெறும் விழாவில், பிரதமர் மோடி கலந்துகொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க உள்ளார்.இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பட்டு வேட்டி சட்டையில் பங்கேற்ற புகைப்படங்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர். நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் சற்று முன் விழா மேடைக்கு வ ந்த ஸ்டாலின் ,அனைவரையும் வரவேற்றார். அப்போது அவர் அணிந்திருந்த பட்டிவேட்டி,சட்டை பலரின் கவனத்தை ஈர்த்தது தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.