• Fri. Jan 2nd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வராஹி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு..,

ByK Kaliraj

Nov 9, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா கொட்ட மடக்கிபட்டி கிராமத்தில் வராஹி அம்மன் கோவில் உள்ளது. தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதில் வராஹி அம்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், திருநீறு ,உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேபி செய்யப்பட்டது.

தொடர்ந்து சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை, நடைபெற்றது . முன்னதாக உலக மக்கள் நன்மைக்காக சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏழாயிரம்பண்ணையில் உள்ள வராஹி அம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.