பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் T.மதியழகன் தலைமையிடம் தலைமையில் தொடங்கப்பட்ட இந்த சிறப்பு மருத்துவ முகாமானது பெரம்பலூர் மாவட்டத்தில் பணி புரியும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் அனைவருக்கும் கண், காது, பல் மற்றும் மகப்பேறு ஆகிய மருத்துவர்கள் கலந்து கொண்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமானது மாவட்ட ஆயுதப்படையில் உள்ள காவலர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் பணி புரியும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆகியோர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.
மேலும் இந்த மருத்துவ முகாமில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் T.மதியழகன் (தலைமையிடம்) மற்றும் ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் S.சோமசுந்தரம் மற்றும் ஆயுதப்படையில் பணிபுரியும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

- பேரிஜம் ஏரிக்குச் செல்ல தடை..,
- தமிழ் சினிமாவில் காணாமல் போன கதாசிரியர்” -வைரமுத்து கவலை
- உவரி தரும் உறுதி!
- கண்ணாடி பாலத்துக்கு என்னாச்சு? கவனம்… கவனம்!
- அண்ணாவுக்கு மரியாதை செலுத்திய அமைச்சர்கள்..,