• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உலக சாதனை படைத்த சிறப்புக்குழந்தைகள்..,

ByPrabhu Sekar

Aug 10, 2025

சிறப்பு தேவைகள் கொண்ட வயது 12 ஆன இளம் நீச்சலாளியான லக்ஷய் கிருஷ்ணகுமார் தன்னை உலக அரங்கில் அறிமுகப்படுத்தி ஒரு முக்கிய சாதனையை படைத்துள்ளார். இவர் இலங்கையின் தலைய்மன்னார் நகரத்திலிருந்து இந்தியாவின் இராமேஸ்வரம் வரை 56 கிலோமீட்டர் கடல் நீந்தி, உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இந்த சாதனை, London-இல் உள்ள World Book of Records-இல் (லண்டன் உலக சாதனை புத்தகம்) பதிவு செய்யப்பட்டு, உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த அசாதாரண முயற்சிக்காக, இந்திய ஒன்றிய விளையாட்டு மற்றும் சுகாதார அமைச்சர், மாண்புமிகு டாக்டர் மான்சுக் மண்டவியா அவர்கள், லக்ஷய்யை டெல்லியில் நேரில் சந்தித்து, பாராட்டு தெரிவித்தார்.

அமைச்சர் டாக்டர் மான்சுக் மண்டவியா தனது அதிகாரப்பூர்வ “X” பக்கத்தில் பகிர்ந்த உரை: “இவர் போன்ற இளம் திறமையாளர்களே இந்தியாவின் ‘அம்ரித் பீட்ஹி’ – வளர்ச்சி பயணத்தின் முக்கிய தூண்கள். இவர்களே எதிர்கால இந்தியாவை உருவாக்கப்போவோர்.”

அவர் மேலும் தெரிவித்துள்ளார்:

“லக்ஷய் கிருஷ்ணகுமார் போன்ற சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகளும், சரியான வழிகாட்டல் மற்றும் உற்சாகத்துடன் உலகளாவிய சாதனைகளை உருவாக்க முடியும் என்பதை இந்த நிகழ்வு வெளிப்படையாக காட்டுகிறது.”

இந்தச் சாதனை, இந்திய இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல், சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கும் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஊட்டுகிறது.

லக்ஷயின் முயற்சியால், வலிமையும், ஊக்கமும், விடாமுயற்சியும் என்னை வெற்றிக்கு இட்டுச் செல்லும் என்பதை உலகம் மீண்டும் உணர்ந்திருக்கிறது என கூறினார்.