• Fri. Apr 26th, 2024

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

Apr 11, 2022

• முட்டாள் பழிவாங்க துடிப்பான்..
புத்திசாலி மன்னித்து விடுவான்..
அதி புத்திசாலி அந்த இடத்திலிருந்து விலகி விடுவான்.

• உன்னை விட்டு விலக நினைப்பவர்களுக்கு பாரமாய்
இருப்பதை விட.. அவர்களை பாராமல் இருந்து பார்
உன் மதிப்பு அவர்களுக்கு தெரியும்..!

• அலட்சியம் என்பது எத்தனை பெரிய தவறு என்று
இழப்பு ஏற்படும் வரை தெரிவதில்லை.

• மறக்க வேண்டியதை நினைத்து வருந்துவதும்..
நினைக்க வேண்டியவைகளை மறந்து விடுவதும் தான்..
இந்த உலகத்தில் தற்போது இருந்து வரும் துன்பங்கள்
அனைத்திற்கும் காரணம்..!

• ஓடி ஓடி உழைத்த போது ஒட்டாத பணம்
ஆடி அடங்கியவுடன் நெற்றியில் வந்து ஒட்டிக் கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *