தனது பதவி உயர்வுக்கு தடையாகஇருந்த தேனி மாவட்டகுழந்தைகள் வளர்ச்சி குழு திட்ட பெண் அதிகாரியை நேற்று அலுவலகத்தில் புகுந்து இளநிலை உதவியாளர் ஒருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டினார் . இதில் காயமடைந்த பெண் அதிகாரி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேனி மாவட்ட சமூக நலத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலகத்தில் திட்ட அலுவலராக பணிபுரிகிறார் ராஜராஜேஸ்வரி வயது 52. அதே அலுவலகத்தில் 2015ம் ஆண்டு முதல்போடியை சேர்ந்த உமாசங்கர் 56 என்பவர் ஜூனியர் அசிஸ்டெண்ட் ஆக பணியாற்றி வந்துள்ளார்.
அலுவல் பணி கோப்புகள் மறுசீரமைப்பு போன்ற வேலைகளில் சரியாக பாராமரிக்காத ஜூனியர் அசிஸ்டென்ட் உமாசங்கர் மீது 70b விதிமுறையின் கீழ் திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி அலுவல் நடவடிக்கை எடுத்துள்ளார்.ஒழுங்கு நடவடிக்கைக்கு பின்பும் அதே நிலை நீடித்ததால் 17 பி விதிமுறையின் கீழ் அலுவல் நடவடிக்கை எடுத்தார்.
இது போன்ற செயல்களால் இடம் மாறுதலாக ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவில் மகளிர் மேம்பாட்டு திட்டத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட் ஆக தூக்கியடிக்கப்பட்டார் உமாசங்கர்
இந்நிலையில் அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்துவிட்டு சொந்த ஊரான போடிக்கு வந்தார் உமாசங்கர். நேற்று பிற்பகல் தேனிக்கு வந்தார். பையில் பெரிய அரிவாளை மறைத்து வைத்தபடி தேனி குழந்தைகள் வளர்ச்சிக்குழு அலுவலகத்தில் நுழைந்தார்.
அங்கு பணியில் இருந்த ராஜராஜேஸ்வரியை தலை மற்றும் கை தோள்பட்டை போன்ற இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார் உமாசங்கர் . இத் தகவல் அறிந்ததும் மாவட்ட திட்ட அலுவலர் தண்டபாணி மற்றும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் துணை கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு நேரில் ஆஜராகி விசாரணை செய்து குற்றவாளியான உமாசங்கரை கைது செய்து தேனி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்
திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி தேனி மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்தவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் கூறும் போதும் ராஜராஜேஸ்வரி மயக்க நிலையில் உள்ளார் அதனால் அவரிடம் விசாரணை செய்யமுடியவில்லை. அவர் மயக்கம் தெளிந்த பின்பே முழுவிபரம் தெரியவரும் என்றனர்.
- போலீசாரை மிரள வைத்த காதல் மன்னன் காசி..!ஆபாச வீடியோக்கள்.. நிர்வாண போட்டோக்கள்.. என போலீசாரை மிரள வைத்துள்ளான் கன்னியாகுமரியை சேர்ந்த காதல்மன்னன் காசி.கன்னியாகுமரி […]
- புதிய பொருளாளர் தேர்வுசெய்யப்படுவார் – கே.பி.முனுசாமிஅதிமுக பொதுக்குழுவில் புதிய பொருளாளர் தேர்வு செய்யப்படுவார் என கிருஷ்ணகிரியில் கே.பி முனுசாமி பேட்டிகிருஷ்ணகிரி மாவட்ட […]
- செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவை இயக்குகிறார் விக்னேஷ் சிவன்…செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது என்பதும் இதற்கான பணிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்று […]
- திரௌபதி முர்மு சென்னை வருகைபா.ஜ.க. ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு 2-ந்தேதிகூட்டணி கட்சியினரை சந்திக்க சென்னை வருகிறார்.இந்திய ஜனாதிபதி தேர்தல் […]
- முக்கிய அறிவிப்பு வெளியிட்ட இந்திய ரிசர்வ் வங்கி…இந்திய ரிசர்வ் வங்கி, கூகுள் பே, போன்பே, நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. […]
- இன்று உலக கைக்குழுக்கல் தினம்இன்று உலக கைக்குழுக்கல் தினமாக கொண்டாடபபடுகிறது. புதிய நண்பரை சந்திக்கும் போது ,அல்லது நீண்டகாலத்திற்கு பின் […]
- சினிமாவைவிட்டு விலகும் அசாசுர நடிகர் நாசர்..கொரோனா தொற்று காலத்தில் ஏற்பட்ட இதய பாதிப்பு காரணமாக, நடிப்பில் இருந்து நடிகர் நாசர் விலக […]
- பல் துலக்காமல் முத்தம்- மனைவி கொலைகேரளாவில பல்துலக்காமல் முத்தம் கொடுத்த பிரச்சனை மனைவியை கணவர் கொலை செய்த விசித்திர சம்பவம் நடந்துள்ளது.கேரள […]
- அரசின் திட்டங்களுக்காக காத்திருந்தவர்களுக்கு..,
ஐந்து மணி நேரத்தில் கைக்கு கிடைத்த ஆர்டர்.நெல்லை மாவட்டத்துக்கு ஆய்வுக்கு வந்த அதிகாரிகள், அரசின் திட்டங்களுக்காக காத்திருந்தவர்களுக்கு ஐந்து மணிநேரத்தில் அதனை நிறைவேற்றிக் […] - அரசுப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனங்களுக்குத் தடை..!தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களை தற்காலிகமாக […]
- மகாராஷ்டிராவில் நாளை முதல்வராகிறார் தேவேந்திரபட்னாவிஸ்மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ்தாக்ரே பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நாளை (ஜூலை 1) பா.ஜ.க.வின் […]
- அதிகம் செலவாகும் நகரங்கள் எது… வெளியான பட்டியல்..உலகின் அதிகம் செலவாகும் நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் உலக அளவில் முதலிடத்தை ஹாங்காங் […]
- விண்வெளியில் ஒருகொடூரமான நரகம்- புதிய கிரகம் கண்டுபிடிப்புசூரியனை அல்லாது வேறு நட்சத்திரங்களை சுற்றும் கிரகங்கள் தான் எக்சோ பிளானட் அல்லது எக்ஸ்ட்ராசோலார் பிளானட் […]
- சமையல் குறிப்புகள்ராஜ்மா கிரேவி: தேவையான பொருட்கள்: பச்சை மிளகாய் – 5, இஞ்சி – ஒரு துண்டு, […]
- படித்ததில் பிடித்தது1.அனுபவம் இன்றி யாரும் அறிவாளி ஆவதில்லை. மவுனமாக தியானித்தால் மனம் தெளிவு பெறும். 3.அடக்கமான இதயம் […]