• Sat. Apr 18th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

நல்லாசிரியருக்கான பரிசுத்தொகையை கொரோனா நிவாரணத்திற்கு வழங்கிய தலைமையாசிரியர்!

By

Sep 10, 2021
Principle

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜான்சனுக்கு இந்த வருடத்திற்கான தமிழக அரசின் நல்லாசிரியர் விருது கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த விருதினை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், ஆட்சியர் முரளிதரன் வழங்கினார். அப்போது விருதுத் தொகை ரூபாய் 10 ஆயிரத்தை, தலைமையாசிரியர் ஜான்சன் கொரோனா நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சியரிடம் திருப்பி வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.