உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24-ஆம் தேதி முதல் ராணுவ தாக்குதலில் கடுமையாக ஈடுபட்டு, முக்கிய நகரங்களை கைப்பற்றி வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக உக்ரைன் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. போர் நாடாகும் பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்க, மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்ததாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, உக்ரைனில் உள்ள கீவ் , கார்கிவ், சுமி, மரியபோல், வோல்நோவாக்கா ஆகிய 4 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்திருந்தது.
இதனிடையே, உக்ரைன் மீது தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வரும் ரஷ்யா மீது அமெரிக்க, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ அமைப்பில் உள்ள பல நாடுகள் பொருளாதார உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்துள்ளது. ரஷ்யா மீது இன்னும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கத்திய நாடுகள் மேற்கொண்டு வருகிறது. ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரால் சர்வதேச பங்குச்சந்தைகளின் வீழ்ச்சி, தங்கம் விலை உயர்வு, கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு விதமான பொருளாதார நெருக்கடிகளை உலக நாடுகள் சந்தித்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு பல நாடுகள் மறைமுகமாகவும், நேரடியாகவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ரஷ்யாவில் வர்த்தகம் செய்து வரும் தொழில்நுட்ப நிறுவனங்களும், வணிக நிறுவனங்களும் பின்வாங்கியுள்ளனர். போக்குவரத்து பிரச்னையும் இருப்பதால் ரஷ்யா எண்ணெய் விற்பதில் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. இதனால், எண்ணெய் ஏற்றுமதியில் 70% முடங்கியுள்ளது என்றும் கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மே மாத விநியோகத்திற்கான பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 139.13 டாலராக உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை இந்த உயரத்தை தொடுவது கடந்த 14 ஆண்டுகளில் இதுவே முதன்முறையாகும். கடந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 10.5 மில்லியன் எண்ணெய் பீப்பாய்களை ரஷ்யா விற்பனை செய்தது. ரஷ்யாவில் எண்ணெய் விலைகள் உயர்வதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். இந்த கச்சா எண்ணெய் விலை உயர்வு ரஷ்யாவுக்கு சாதகமாக இருக்கலாம். ஆனால், அதை வாங்குபவர்கள் பெரும் முடக்கத்தை எதிர்கொள்கின்றனர். இது மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மேற்கத்திய நாடுகள் தடை விதித்ததால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரால் ஒன்றுக்கு 300 டாலரை எட்டும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்கும் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் மத்தியில் ஒருமித்த முடிவு இதுவரை எட்டப்படவில்லை என்பது குறிப்பிடப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில். பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.
- இனி ரேஷன் கடைகளிலும் ‘மீண்டும் மஞ்சள் பை’…தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கக்கூடிய வகையில் ‘மீண்டும் […]
- ஒராண்டில் திமுக எந்த சாதனையும் செய்யவில்லை- பிரேமலதா விஜயகாந்த் பேட்டிகோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்த பிரேமலாத விஜயகாந்த் திமுக அரசு கடந்த ஒராண்டில் […]
- சார்ஜிங் பூத்… ஆப் மூலம் பணம் செலுத்தி சார்ஜிங் செய்துக்கொள்ளலாம்…கேரளா மாநிலம், கோட்டயம் அடுத்த உழவூர் ஊராட்சியில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய மின்கம்பத்தில் சார்ஜிங் […]
- மரம் அறுக்கும் ரம்பத்தால் மனைவி,பிள்ளைகளை கொலை செய்த ஐடி ஊஉழியர் தற்கொலைசென்னையில் பயங்கரம் மரம் அறுக்கும் ரம்பம் வாங்கி மனைவி, பிள்ளைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த […]
- ஏழுமலையானை தரிசிக்க 15 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்..திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக 15 மணி நேரம் காத்திருப்புஉலகப்புகழ் பெற்ற எழுமலையான் கோயிலில் […]
- கழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கல் -4 பேர் கைதுகழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கி விற்பனை செய்த மில் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது. […]
- தமிழக காங்கிரசுக்கு அடுத்த தலைவர் விஜயதாரணியா -ஜோதிமணியா?தமிழக காங்கிரசில் மாநில தலைவர் பதிவிக்கு அடுத்து பெண் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கபடலாம் என்று பேசப்படுகிறது. […]
- முதல்வரின் குரல் பாஜகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது..மதுரையில் நடைபெற்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது திராவிடர் விடுதலைக் கழகம் […]
- சிரித்த முகத்துடன் பிறந்த அதிசய குழந்தை…. வைரலாகும் புகைப்படங்கள்…ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தை எப்போதும் சிரித்துக்கொண்டிருப்பது போன்ற முக அமைப்புடன் பிறந்திருக்கிறது.உலக நாடுகளில் ஒவ்வொரு நாளும் […]
- சாண்ட்விச் தான் உணவே… 23 ஆண்டுகளாக சாண்ட்விச் சாப்பிட்ட இளம்பெண்..இங்கிலாந்தில் கடந்த 23 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவர் சாண்ட்விச் மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வரும் சம்பவம் […]
- இதை செய்யாவிட்டால் ரேஷனில் பொருள் வாங்க முடியாது.ஜூன் 30-ம் தேதிக்குள் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காவிட்டால் ரேஷன் பயன்களைப் பெற முடியாது […]
- திமுக ஆலோசனைக் கூட்டம்… முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்…சென்னை அறிவாலயத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த […]
- 79,000 மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள்முதலமைச்சர்உத்தரவின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெற்று வரும் தனியார் துறையின் […]
- சொதி:தேவையானவை: பாசிப்பருப்பு – 200 கிராம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் – தலா 200 கிராம், […]
- புத்துணர்வு தரும் ஏற்காடு கோடை விழா…கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 […]