இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா போன்றோர் உலகக்கோப்பையை வென்றுக்கொடுப்பார்கள் என நினைப்பது என்றுமே நடக்காத காரியம் என முன்னாள் வீரர் கபில்தேவ் விளாசியுள்ளார்.
2023ம் ஆண்டின் முதல் தொடரில் இலங்கைக்கு எதிராக இந்தியா களமிறங்குகிறது. இதில் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது பிசிசிஐ. அதாவது ரோகித், விராட் கோலி, கே.எல்.ராகுல் உள்ளிட்ட பல சீனியர் வீரர்களை டி20 அணியில் இருந்து புறக்கணித்துள்ளது.
2024ம் ஆண்டு வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான திட்டம் தற்போதே இந்திய அணியில் தொடங்கிவிட்டது. அதன்படி ரோகித், கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் யாரும் இனி டி20 திட்டத்தில் இருக்க மாட்டார்கள். பெரும்பாலும் இளம் வீரர்களுக்கு தான் வாய்ப்பு என பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில் இதற்கு முன்னாள் வீரர் கபில் தேவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய கபில், உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் சில கடினமான முடிவுகளை எடுத்து தான் தீர வேண்டும். தனிப்பட்ட வீரரை பற்றி யோசிக்காமல், அணியை பற்றி யோசிக்க வேண்டும். கோலி, ரோகித் என 2 – 3 வீரர்கள் உலகக்கோப்பையை வென்றுக்கொடுப்பார்கள் என நினைத்தால், அது ஒருபோதும் நடக்கவே நடக்காது. கோப்பையை வெல்லும் அளவிற்கான இளம் வீரர்கள் நம்மிடம் உள்ளனர். அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால்தான் உலகக்கோப்பையை வெல்ல முடியும்.
இரண்டு மூன்று வீரர்கள் அணியின் தூண்களாக இருப்பதெல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று தான். ஆனால் அதனையெல்லாம் உடைத்துவிட்டு, 5- முதல் 6 வீரர்கள் வரை கொண்ட தூண்களை உண்டாக்க வேண்டும். எனவே சீனியர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு, இளம் வீரர்களை முன்னுக்கு கொண்டு வருவது சரியான முடிவு. அதனை அணிக்காக ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என கபில்தேவ் கூறியுள்ளார்.
50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தாண்டு இறுதியில் இந்திய மண்ணில் நடைபெறவுள்ளது. இதனால் மற்ற அணிகளை விட இந்திய வீரர்களுக்கு பெரிய பலமாகும். இதனை மனதில் வைத்து தான் பிசிசிஐ தற்போதே 20 வீரர்களை தேர்வு செய்துவிட்டது. அந்த 20 வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்து உலகக்கோப்பைக்கு தயார் செய்யவுள்ளது.
- ஈரோடு கிழக்கு தொகுதி: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்புஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. இ.பி.எஸ். – ஓ.பி.எஸ் அணிகள் தவிர மற்ற அரசியல் […]
- தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஈரோடு மாநகர் மாவட்டம் புதிய நிர்வாகிகள் அறிவிப்புதே.மு.தி.க. ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளரும் ஈரோடு கிழக்கு தொகுதி தே.மு.தி.க. வேட்பாளருமான எஸ்.ஆனந்த் வெளியிட்டுள்ள […]
- இன்று கொடியேற்றத்துடன் பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கியதுபழனியில் தைப்பூசத் திருவிழா வெகுவிமரிசையாக இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் […]
- ‘பிபிசி’ ஆவணப் பட சர்ச்சை-பாராளுமன்றத்தில் குரல் எழுப்ப திமுக எம்பிகள் முடிவுபாராளுமன்ற பட்ஜெட் கூட்டதொடர் தொடங்க இருப்பதையொட்டி தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை […]
- சுற்றுலா வந்த கேரளா வாகனம் விபத்துநீலகிரி மாவட்டம் மஞ்சூர் சாம்ராஜ் பகுதியில் கேரளாவில் இருந்து சுற்றுலா வந்த நான்கு நபர்கள் KL53 […]
- ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடுஒடிசா மாநிலத்தில் . பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் இன்று மதியம் […]
- வானில் ஒரு அரிய நிகழ்வு.. பூமி அருகே வரும் வால் நட்சத்திரம்50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு மிக அரிய நிகழ்வாக பூமிக்கு அருகே வால் நட்சத்திரம் வருகிறது. […]
- கூடலூர் அருகே பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலிநீலகிரி மாவட்டம் கூடலூர் தேவாலப் பகுதியில் அரசு பேருந்து சென்ற போது கேத்தன் (53) என்பவர் […]
- நீலகிரி மாவட்டம் ஓவேலியில் யானை தாக்கியதில் மேலும் ஒருவர் பலி நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி அருகில் யானை தாக்கியதில் மேலும் ஒருவர் பலியானதால்பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.நீலகிரி […]
- அனைத்து இடங்களிலும் தமிழை கொண்டு செல்லும் அரசாக திமுக அரசு திகழ்கிறது- முதல்வர் பேச்சுநிர்வாகத்தில் தமிழ், கோயில்களில் தமிழ், நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழை கொண்டு செல்லும் […]
- கார்- சரக்கு ஆட்டோ விபத்து ..5 பேர் காயம்உதகையில் சுமார் 10 அடி பள்ளத்தில் சரக்கு ஆட்டோ மற்றும் கார் கவிழ்ந்து விபத்துஏற்பட்டத்தில் 5 […]
- தாய்ப்பால் தானம் வழங்கிய ஸ்ரீவித்யா பைரவிற்கு பாராட்டுயாதும் கோவை மற்றும் புதிய பாதை அமைப்பினர் இணைந்து 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் […]
- வாயில் கருப்பு துணி கட்டி வழக்கறிஞர்கள் போராட்டம்உதகையில் வாயில் கருப்பு துணி கட்டி தொடரும் வழக்கறிஞர்கள் போராட்டம்… நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட […]
- குன்னூரில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில்நீலகிரி மாவட்ட கழகச் செயலாளர் பா.மு. முபாரக் ஆலோசனையின் […]
- ஈரோடு தேர்தல் தமிழ்நாட்டில் ஒருமாற்றத்தை உருவாக்கி காட்டும்-செங்கோட்டையன்தமிழ்நாட்டில் இந்த தேர்தல் ஒரு மாற்றத்தை உருவாக்கி காட்டும் எனஅ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று […]