• Sat. Apr 27th, 2024

சாலைகளில் மரங்கள் வளர்க்கும் திட்டம்: அமைச்சர் நிதின் கட்கரி

Byகாயத்ரி

Dec 2, 2021

நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தும் போது வெட்டப்படும் மரங்களை ஈடுகட்ட, சாலைகளில் மரம் வளர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்துள்ள அவர், ஒப்பந்ததாரர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் மூலம் மரங்கள் வளர்க்கப்படுவதாகத் தெரிவித்தார். 2021 மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 94 திட்டங்களில் 55.10 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *