• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

நீர் தேக்கத் தொட்டி அமைக்க கோரிக்கை..,

ByK Kaliraj

Nov 15, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மம்சாபுரம் ஊராட்சியை சேர்ந்தது பாறைப்பட்டி கிராமம். இங்கு 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த பத்து தினங்களாக ஊராட்சியில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை.

இதனால் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக தனியார் வண்டிகளில் குடம் பத்து ரூபாய் முதல் பதினைந்து ரூபாய் வரை விலைக்கு வாங்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. அமைக்கப்பட்டிருந்த தரைமட்ட நீர் தேக்க தொட்டி காரணம் இல்லாமல் அகற்றப்பட்டு விட்டது. இதனால் அடிமை பயன்படுத்த வேண்டிய நிலை. தண்ணீர் நுரையுடன் துர்நாற்றத்துடன் தண்ணீர் வெளியே வருகிறது. இதனால் தண்ணீரை குளிப்பதற்கோ துவைப்பதற்கோ முடியவில்லை இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை.

இதனால் தண்ணீர் இருக்கு அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்ல வேண்டிய நிலை நான் இப்போது மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் அவர்கள் உடனடியாக அகற்றப்பட்ட தரைமட்ட நீர் தேக்கத் தொட்டி அமைக்கவும் அடி பம்பை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.