திண்டுக்கல்லில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பேரணி நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் மக்கள் ஒற்றுமை மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், திண்டுக்கல் மாவட்ட இளைஞர்களின் வேலைக்கான தொழில், விவசாய வளர்ச்சியை முன்னிறுத்தி, திண்டுக்கல் மாவட்டத்தில் 6 முனைகளில் இருந்து துவங்கிய இருசக்கர வாகன பிரச்சார நிறைவு பொதுக்கூட்டம் மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.

அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் கே.பாலகிருஷ்ணன்,
மத்தியக்குழு உறுப்பினர் தோழர் கே.பாலபாரதி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் தோழர். மதுக்கூர் ராமலிங்கம், தோழர்.என்.பாண்டி, திண்டுக்கல் பாரளுமன்ற உறுப்பினர் தோழர் ஆர்.சச்சிதானந்தம் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் ஜி.ராணி,
வடமதுரையில் இருந்து வருகை தந்த இருசக்ர வாகன பிரச்சாரகுழுவிற்கு என்.ஜி.ஒ. காலனியில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.










