காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனிப்பட்ட பயணமாக வெளிநாடு சென்றிருந்தநிலையில் நேற்று இரவு தாயகம் திரும்பினார்.
டெல்லி திரும்பிய ராகுல் காந்தி, கோவா அரசியல் சூழல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் காந்தி தனிப்பட்ட பயணமாக கடந்தமாதம் கடைசி வாரம் வெளிநாடு சென்றிருந்தார். எந்த நாட்டுக்குச் சென்றிருந்தார் என்பது குறித்து காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்க மறுத்துவிட்டனர். தனது பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு டெல்லி திரும்பினார்.
கோவா, உ.பி., பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து அதற்கான பணிகளில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கோவா மாநில காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோதன்கர், சட்டப்பேரவைத் தலைவர் திகம்பர் காமத் ஆகியோர் ராகுல் காந்தி வருகைக்கு முன்பே டெல்லி அழைக்கப்பட்டிருந்தனர். ராகுல் காந்தி டெல்லி திரும்பியதும் இவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனையில் கூட்டணி குறித்து பேசப்பட்டிருக்கலாம் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டில் இருந்தவாரே ராகுல் காந்தி, மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், கோவா தேர்தல் பொறுப்பாளர் ப.சிதம்பரம் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி, தேர்தலுக்கு தயாராகியது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
கோவா மாநிலத்தில் காங்கிரஸ்கட்சி, கோவா ஃார்வேர்ட் கட்சியுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறது, இது தவிர பிற கட்சிகளுடனும் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. பாஜகவுக்கு எதிராக ஒன்று சேர அனைவரும் வரலாம் என திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் சமீபத்தில் கோவாவில் அழைப்புவிடுத்திருந்தது. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக வெளியான தகவலை காங்கிரஸ் மூத்த தலைவர் கேசி வேணுகோபால் மறுத்துள்ளார்.
ஆனால், கோவாவைப் பொறுத்தவரை ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களிடையே எதிர்ப்புமனநிலை நிலவுவதால் அதை சாதகமாக்க திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி முயல்கின்றன.
, பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி விரைவில் இதுபோன்று விரிவான ஆலோசனை கூட்டத்தை நடத்துவார் எனத் தெரிகிறது. காங்கிரஸ்கட்சியின் மத்தியக் குழு கூடி விரைவில் 5 மாநிலங்களுக்குமான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும்.
- அதிமுக வெளி நடப்பு என்பது ஒரு சடங்கு -கே.எஸ்.அழகிரிநிதிநிலை அறிக்கையின்போது அதிமுக வெளி நடப்பு குறித்த கேள்விக்கு.அதிமுக வெளி நடப்பு என்பது ஒரு சடங்கு […]
- மதுரை செல்லம்பட்டி அருகே சாலையில் பாலை கொட்டி போராட்டம்மதுரை செல்லம்பட்டி அருகே.பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக் கோரி பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை […]
- ௭ண்ணும் ௭ழுத்தும் கற்றலை போற்றுவோம் விழாமதுரை மாவட்டம் தங்களாச்சேரி கிராமத்தில் உள்ள நடுநிலைப்ள்ளியில் ௭ண்ணும் ௭ழுத்தும் கற்றலை போற்றுவோம் விழா நடைபெற்றது. […]
- ரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்ன? எடப்பாடி பழனிசாமிஇன்று தாக்கல் செய்யப்பட்ட பொதுபட்ஜெடில் அறிவிக்கப்பட்டரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்னவென்று தெரிவிக்கவில்லை என எடப்பாடி […]
- சோழவந்தானில் பங்குனி மாத பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்புசோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் பங்குனி மாத பிரதோஷ […]
- விஜய் சேதுபதி நற்பணி இயக்கம் நடத்திய கிரிக்கெட் போட்டிஇன்றைய இளைஞர்களை சீரழிக்கும் செல்போன், மது போதை இவைகளில் இருந்து இளைஞர்களை விடுவிக்கும் விதமாக நடிகர் […]
- திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சிலம்பம் சுற்றிய மணமக்கள்..!கும்பகோணம் அருகே பாபநாசத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் சிலம்பம் […]
- தஞ்சாவூரில் இயற்கை மாற்றுப் பொருள் கண்காட்சி..!தஞ்சாவூரில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாறாக இயற்கை மாற்றுப் பொருள் கண்காட்சி நடைபெற்று வருகின்றன.தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் […]
- நெல்லையில் ஹெல்மெட் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி..!நெல்லையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.திருநெல்வேலி மாநகர காவல் துறை, கோபாலசமுத்திரம் […]
- 8ம் வகுப்பு மாணவர் ஜம்பிங் ஜாக்ஸ் செய்து உலக சாதனை முயற்சிராஜபாளையத்தை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் மணிகண்டன் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் ஜம்பிங் ஜாக்ஸ் […]
- பேராபத்தை சந்திப்போம்-ரியல் எஸ்டேட் மாநாட்டில் சத்குரு பேச்சு!“குறைந்த நிலப்பரப்பும், அதிகப்படியான மக்கள் தொகையும் கொண்ட நம் நாட்டில் கடந்த காலங்களை போல் கட்டுமானங்கள் […]
- மதுரை மெட்ரோ திட்டம்- எஸ்எம்எஸ் அனுப்பிய தமிழக அரசுமதுரை மக்களுக்கு 8,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலமாக […]
- அதானி பற்றி பேசினால் அது தேச துரோகமா.? மதுரை விமான நிலையத்தில் கே எஸ் அழகிரி பேட்டி..மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே […]
- இந்தியாவிலேயே அதிக கோயில்கள் கொண்ட மாநிலங்களில்..
முதலிடம் பெற்றுத் திகழ்வது தமிழ்நாடுதான்..!இந்தியாவிலேயே அதிக கோயில்கள் கொண்ட மாநிலங்களில் முதலிடத்தில் இருப்பது தமிழ்நாடுதான் என்பது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை […] - லைஃப்ஸ்டைல்உடற்பருமனும் அதனைக் குறைக்கும் வழிகளும்: