புஞ்சை புளியம்பட்டி நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது . நகர அவைத்தலைவர் சாகுல்அமீது தலைமை தாங்கினார் .நகர செயலாளர் பி.ஏ.சிதம்பரம் முன்னிலை வகித்தார். ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் கீதா நடராசன் உள்ளிட்ட திமுக மாவட்ட, நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பொதுக்குழு உறுப்பினர் ஜெயராஜ் நன்றி கூறினார். கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொன்டனர்.