இந்திய ராணுவத்திற்கு முதற்கட்டமாக 120 புதிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் வாங்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.
இந்தியா – சீன எல்லையில் கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவிவரும் சூழலில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் 120 பாலிஸ்டிக் ஏவுகணைகள் வாங்க இந்திய ராணுவத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ஏவுகணைகள் வெகு விரைவில் தயாரிக்கப்பட்டு இந்தியா – சீன எல்லையில் தயார் நிலையில் நிறுத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சக வட்டாரம் தெரிவிக்கின்றது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நிலத்தில் இருந்து மற்றொரு நில இலக்கை தாக்கக்கூடிய புதிய தலைமுறை பிரளய் ஏவுகணை 150 முதல் 500 கி.மீ. தூரம் சென்று இலக்குகளைத் தாக்கக்கூடியது. இந்த ஏவுகணை இந்திய உந்துவிசை ஏவுகணை திட்டத்தின்கீழ், பிருத்வி ஏவுகணையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். இது அதிநவீன மோட்டார் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டிலே தயாரிக்கப்படும்
120 புதிய பாலிஸ்டிக் ஏவுகணைகள்
