விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சத்திரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் சமேத அன்னபூரணி அம்மன் கோவில் உள்ளது.இக் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திவர்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை, தீபாராதனை, நடைபெற்றது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபாட்டில் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.




