• Wed. Apr 23rd, 2025

ஆண் பிரேதம் உடலை கைப்பற்றி காவல்துறை விசாரணை

ByKalamegam Viswanathan

Apr 4, 2025

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே ஆஸ்டின் பட்டியில் பாலம் அருகே நீரில் மூழ்கி 40 வயது மதிக்கதக்க ஆண் பிணம் காணப்பட்டது. இது குறித்து ஆஸ்டின்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மாரிஸ்வரி அளித்த புகாரின் பேரில், ஆஸ்டின்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து இறந்தவரின் உடலை உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கொண்டு சென்றனர்.

கடந்த பத்து தினங்களுக்கு முன்பு கிளாமர் காளி என்ற பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது அடையாளம் தெரியாத பிணம் பெரும் சர்ச்சை கிளப்பி உள்ளது.