• Tue. Jan 20th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சாலைகளை சீரமைத்து தர கோரிக்கை மனு..,

ByT. Balasubramaniyam

Dec 22, 2025

அரியலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட எத்திராஜ் நகர் பகுதிகளிலுள்ள சாலைகளை சீரமைத்து தர வேண்டும் அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் சிபிஐ எம் கிளை நிர்வாகி ஆதிலட்சுமி கோரிக்கை மனு அளிப்பு.

எத்திராஜ் நகர் பகுதி,சிபிஐ எம் கிளை நிர்வாகி ஆதிலட்சுமி அரியலூர் மாவட்ட கலெக்டர் பொ இரத்தினசாமியிடம் , மக்கள் குறைதீர் கூட்டத்தின் போது அளித்த மனுவில் , அவர் தெரிவித்துள்ளதாவது எத்திராஜ் நகர் பகுதியில் அனைத்து சாலைகளும் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது,இதனால் அப்பகுதியிலுள்ள சாலைகள் அனைத்தும் சீரமைத்து, புதுப்பித்து தர வேண்டும் என அக்கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.