சாலையில் சல்லி கற்களை கொட்டிச் செல்லும் கொடுஞ்செயல்… வாகனத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!
இன்று காலை கூத்தியார்குண்டு நான்கு வழிச்சாலையில் சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி, பலமுறை இதுபோன்று நடு ரோட்டில் கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் வாகன விபத்து ஏற்பட நேரிடும் என ஆஸ்டின்பட்டி காவல்துறையினரால் பலமுறை அறிவுறுத்தப்பட்டும், சிமெண்ட் கலவை தயாரிக்கும் நிறுவனம் ஒருபோதும் செவி சாய்க்கவில்லை. எனவே இதற்கு காவல்துறையினர் அந்த நிறுவனத்தின் வாகனத்தை பறிமுதல் செய்து அபராதம் விதித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர