கரூர் மாவட்டம் குளித்தலையில் காளைகள் மற்றும் குதிரைகள் வளர்ப்போர் சங்கம் மற்றும் குளித்தலை நண்பர்கள் சார்பில், மகா மாரியம்மன் கோவில் திருவிழா மற்றும் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாபெரும் முதலாம் ஆண்டு எல்கை பந்தய போட்டி நடைபெற்றது. எல்லை கோட்டில் இருந்து சீறி பாய்ந்த காளைகள், குதிரைகள் வெற்றி பெற்று உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.
கரூர் மாவட்டம் குளித்தலை மகா மாரியம்மன் கோவில் திருவிழா மற்றும் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு குளித்தலை நண்பர்கள், காளை குதிரை வளர்ப்போர் சங்கம் சார்பில் முதலாம் ஆண்டு மாபெரும் எல்கை பந்தய போட்டி நடைபெற்றது.
இதில் மாடுகளுக்கான சிறிய மாடு, ஒத்தை மாடு, இரட்டை மாடு, குதிரைகளுக்காக, புதிய குதிரை, பெரிய குதிரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்த எல்கை பந்தயப் போட்டியில் காளைகள் மற்றும் குதிரைகள் எல்லைக்கோட்டில் இருந்து சீறிப்பாய்ந்தன. சிறிய மாட்டிற்கு 3 மைல், பெரிய மாட்டிற்கு 6 மைல், இரட்டை மாட்டிற்கு 8 மைல் தொலைவும், சிறிய குதிரைக்கு 8மைல் தொலைவும், பெரிய குதிரைக்கு 10 மைல் தூரம் நிர்ணயிக்கப்பட்டது.
இதில் திருச்சி, கரூர் தஞ்சாவூர், கோவை திருவாரூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட காளைகள் குதிரைகள் கலந்து கொண்டன. இந்த எல்கை பந்தய போட்டியில் வெற்றி பெற்ற குதிரை மற்றும் காளை உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.