• Fri. May 3rd, 2024

உசிலம்பட்டியில் கர்னல் ஜான் பென்னி பிறந்த நாளை முன்னிட்டு, விவசாயிகள் ஜான்பென்னிக்குக் பொங்கல் வைத்து கொண்டாடினர்…

ByP.Thangapandi

Jan 14, 2024

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிக்குக் பிறந்த நாள் ஜனவரி 15ஆம் தேதி பெரியாறு அணை மூலம் பாசன வசதி பெரும் தேனி, மதுரை, இராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களால் ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை வளாகத்தில் உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாய் விவசாயிகள் சார்பில் பென்னிக்குக் பிறந்த நாளை கொண்டாடும் வண்ணம் பென்னிக்குக் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் மதுரை தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் பலரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பென்னிக்குக் திரு உருவ படத்திற்கு மரியாதை செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *