தமிழக முழுவதும் அதிமுக சார்பில் புரட்சித்தலைவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 36 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிற சூழலில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு புரட்சித் தலைவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் திருவுருவப்படத்திற்கு அதிமுக நகர கழகத்தின் சார்பில் நகரச்செயலாளர் பூமாராஜா தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதில் மாநில அம்மா பேரவை துணைச்செயலாளர் துரைதனராஜ், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் முன்னாள் எம். எல். ஏ. ஏ. கே. டிராஜா, வழக்கறிஞர் லட்சுமணன், வேல் காட் , கே.எஸ் லட்சம் , குணசேகர பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் முன்னாள் சேர்மன் டி.ஆர். பால்பாண்டி, எஸ் ராஜா, தனிக்கொடி, வில்லாணி ராஜா, கணேசன், சாமி ,குணா , பாலமுருகன் , உக்கிரபாண்டி, கோபாலகிருஷ்ணன், மோகன், குமார், பாண்டி, ராமன், ஆண்டி, ஊராட்சி மன்ற தலைவர் அபிமன்னன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.