• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தென்கரை நாமத்துவார் கிருஷ்ணன் கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு வழிபாடு …

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்கூட்டம் செல்லாது என்று தொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அவருடைய சொந்த ஊரான பெரிய குளத்திற்கு வருகை தந்து கட்சி ஆதரவாளர்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை முதல் ஓபிஎஸ் ஐ சந்திக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் அதிக அளவில் வந்ததால் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நேற்று பெரியகுளத்தில் உள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு செல்லாத முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று காலையில் பெரியகுளம் தென்கரையில் உள்ள நாமத்வார் கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். அப்பொழுது கோவில் நிர்வாகத்தினர் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வழிபாடு நடத்தினர். கிருஷ்ணன் கோவிலில் வழிபாடு முடித்தபின் அங்கு வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணர் சிலை ஊஞ்சலை ஆட்டி வழிபாட மேற்கொண்டார்.