கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பெங்களூருவில் 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஏற்கனவே அமலில் இருந்த ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் இன்று பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பெங்களூருவில் இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. வருகிற 25-ந் தேதி வரை இந்த இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். இரவு நேர ஊரடங்கை மீறி தேவையின்றி வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என அவர் கூறினார்.