• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பேட்டரிகளை திருடும் மர்ம கும்பல்..,

BySeenu

Jul 13, 2025

கோவை, கரும்புக்கடை சுற்றுவட்டார பகுதிகளிலும், குறிப்பாக சௌக்கார் நகர் பகுதிகளிலும் விட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களில் இருந்து மர்ம நபர்கள் பேட்டரிகளை, திருடி வரும் சம்பவம் அப்பகுதி மக்களை பெரிதும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்த நிலையில் 11-07-25 அன்று நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் சௌகார் நகர் பகுதியில் வாகனத்தின் பேட்டரியை திருடி செல்லும் காட்கள் அந்த பகுதிகளில் பொருத்தி இருக்கும் கண்காப்பு காமிராக்களில் பதிவாகி உள்ள நிலையில், தற்போது அந்த காட்சிகளை அப்பகுதி மக்கள் சமூக வளைதளங்களில் பரப்பி. சௌக்கார் நகர் பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு பேட்டரிகளை திருடும் மர்ம கும்பல்களை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.