• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்!!

ByA.Tamilselvan

Sep 4, 2022

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு அதில் கிரிப்டோ கரன்சி தொடர்பான பதிவுகள் இடப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், அரசு அதிகாரிகள் போன்றோரின் சமூக வலைதள கணக்குகளை ஹேக் செய்வது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
அதில், அனைவருக்கும் வணக்கம், எங்கள் கட்சி அதன் சொந்த கிரிப்டோ வாலட்டை உருவாக்கியுள்ளது. இன்று, முன்னெப்போதையும் விட, வளர்ச்சியில் உங்கள் உதவி எங்களுக்குத் தேவை. கோவிட் 19 உடன் போராடும் மக்களுக்கு உதவ $1 மில்லியன் திரட்ட விரும்புகிறோம்! எனவே நாங்கள் கிரிப்டோ பணப்பைகளை உருவாக்கினோம். அனைத்து பணமும் ஹெல்பிண்டியா நிறுவனத்திற்கு அனுப்பப்படும் என்று ட்விட் செய்துள்ளனர்.செந்தில்பாலாஜியின் பெயரை நீக்கிவிட்டு Variorius என்றும் மாற்றியுள்ளனர்.

Dr. T R B Rajaa
@TRBRajaa
Honourable Minister Senthil Balaji’s personal
@Twitter
handle has been #Hacked supposedly using a #malware. We have written to
@TwitterIndia
regarding the same & hope the issue will be resolved asap. https://twitter.com/v_senthilbalaji/status/1566166756393091073