சோழவந்தான் தொகுதி, பேரூர் கழகச் செயலாளர் தாயார் மறைவிற்கு, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் கழகச் செயலாளராக இருப்பவர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ். இவரது தாயார் ஜெயஜோதி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக காலமானார். இந்நிலையில் வாணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் நேரில் வந்து வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினார்கள்.
இதில் சோழவந்தான் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன் பேரூர் துணைச் செயலாளர் ஸ்டாலின் பிற்பட்டோர் நலத்துறை உறுப்பினர் பேட்டை பெரியசாமி முன்னாள் பேரூர் செயலாளர் முனியாண்டிபேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் மற்றும் வார்டு செயலாளர்கள், தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பாலசுப்பிரமணியம் பொதுக்குழு உறுப்பினர் ஹதிப் முகமது மில்லர்.முட்டை கடை காளி சங்கங்கோட்டை சந்திரன் மற்றும்திமுக மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் பல உடனிருந்தனர்