• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

புகைபிடிப்போரில் 80% நபர்கள் மருத்துவ ஆதரவுடன் விடுபட முடியும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிபுணர்கள் வலியுறுத்தல்

Byகுமார்

May 30, 2024

புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங் பரிசோதனையை ஒவ்வொரு ஆனமாக புகை பிடிக்கும் நபர்கள் செய்து கொள்வது முக்கியம் விசோதனை பிரிங்காக குறைவான மருந்து அளவு கொண்ட ஒரு சிடி பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப் படுவதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பு நிகழ்வில்..,

மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் நுரையீரலியல் சிகிச்சை துறையின் தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர். G. வேல்குமார் பேசுகையில், கஞ்சா (மரிஜுவானா) அல்லது கோகைன் போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமைப்படுதலோடு ஒப்பிடுகையில் (புகைபிடித்தல்) அடிமைத்தனம் என்பது, விடுபடுவதற்கு கடுமையானவைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது என்று நிக்கோடின் மிகக் கூறினார். புகைபிடிப்பதை வெற்றிகரமாக கைவிடுவதற்கு புகைபிடிப்பவர்களுக்கு உதவ உளவியல், மருத்துவம் மற்றும் சமூக நடவடிக்கைகளின் ஒருங்கிணைந்த சரியான சிகிச்சை அவசியமாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

மேலும், புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கு மருத்துவ நிபுணர்களது ஆலோசனையை தேடுவது கண்டிப்பாக அவசியம். கவுன்சிலிங் மருந்துகள் மற்றும் ஆதரவு குழுக்கள் ஆகிய வழிமுறைகளை உள்ளடக்கிய முறைசார்ந்த செயல்திட்டங்களில் பங்கேற்பவர்களில் ஏறக்குறைய 80% புகைபிடிக்கும் வழக்கத்தை விட்டுவிடுவதில் வெற்றி காண்கின்றனர். இதற்கு மாறாக, நிக்கோடினுக்கு (புகைபிடித்தல்) அடிமைப்படுதலிலிருந்து தாங்களாகவே விடுபட முயற்சிக்கின்ற நபர்களுள் அம்முயற்சியில் வெற்றி பெறுகின்றனர் என்று மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிபுணர்கள் வலியுறுத்தினர்.