விருதுநகர் மாவட்டம் இராஜரபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் 38வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு அலங்காரத்தில் விநாயகர் சிலைகள் பிரமாண்டமாக செய்யப்பட்டு தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் கோவில் அருகே விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு நாள்தோறும் கலை நிகழ்ச்சிகள் ஆன்மீக சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சியில் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஏழை எளிய மக்களுக்கு தையல் மிஷின்கள் வழங்கப்பட்டன பள்ளி நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு புத்தக பைகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் சித்ரா மருத்துவர் கோபால் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு தையல் மிஷின் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு புத்தகப்பை வழங்கினர்.





