கலைஞர் நினைவு நூலகம் அடுத்தாண்டு ஜனவரிக்குள் கட்டி முடிக்கப்படும் எனவும், திமுக ஆட்சியில் சாலை விபத்துக்கள் 15% குறைந்துள்ளன என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
மதுரை புது நத்தம் சாலையில் 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலக கட்டிடப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, ஊரக துறை அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.
பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அளித்த பேட்டியின்போது, ‘கலைஞர் நினைவு நூலக கட்டுமானம் விரைவாகவும், தரமாகவும் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானத்தின் தரம், தொழிலாளர் பாதுகாப்பு, அதிகாரிகள் கண்காணிப்பு ஆகிய பணிகள் அனைத்தும் சரியாக நடைபெற்று வருகின்றன. கீழ் தளம், தரை தளம், முதல் தளம் ஆகிய தள பணிகள் முடிவடைந்து உள்ளன. இந்த வளாகத்தில் கலைஞரின் சிலையும் அமைக்கப்பட உள்ளது. 31.1.2023 ஜனவரிக்குள் நூலகத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
பழனி – கொடைக்கானல் – மூணாறு சாலைக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் அக்கற்றப்பட வேண்டிய சுங்க சாவடிகளின் விபரங்களை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம், அது வந்தவுடன் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும். கடந்த ஆட்சி காலத்தை விட, திமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் 15% விபத்துக்கள் குறைந்து உள்ளதாக நாடாளுமன்ற அவையில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். விபத்திற்குள்ளான மதுரை புது நத்தம் மேம்பாலத்தை விரைந்து கட்டி முடிக்க தேசிய நெடுஞ்சாலை துறைக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- தமிழ் சினிமா நடிகர்கள் சங்க அலுவலகத்தில் சுதந்திரதினவிழாமதுரை காளவாசல் பாத்திமா நகர் 1வது தெருவில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்க அலுவலகத்தில் 75வது […]
- அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3%உயர்வு – முதலமைச்சர் அறிவிப்பு!!அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.நாட்டின் 76ஆவது சுதந்திர […]
- ஊர்வலம், ஆர்பாட்டம் நடித்த மதுரையில் தடை..!!மதுரையில் அடுத்த 15 நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து […]
- ஒரு கால்டாக்ஸி டிரைவரின் ஒருநாள் வாழ்க்கை படமாகிறது! – “4554”மன்னன் ஸ்டுடியோஸ்சார்பில் டாக்டர்.பிரபா கர்ணன் தயாரிக்கும்‘4554’ திரைப்படத்தில்அஷோக் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக ஷீலா நாயர் நடிக்க, […]
- இன்றைய ராசி பலன்மேஷம்-தாமதம் ரிஷபம்-ஆதாயம் மிதுனம்-சிந்தனை கடகம்-உழைப்பு சிம்மம்-உதவி கன்னி-பேராசை துலாம்-பயணம் விருச்சிகம்-விவேகம் தனுசு-களிப்பு மகரம்-ஏமாற்றம் கும்பம்-சாதனை மீனம்-விருத்தி
- ஆர்.நல்லுகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருது.. முதல்வர் ஸ்டாலின் வழங்கல்.. !இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லுகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருதினை முதலமைச்சர் வழங்கினார். சுதந்திர […]
- சின்னத்திரை நடிகர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்புஆர்.ஆர்.ஆர். படத்தில் கொமரம்பீமாக நடித்த ஜூனியர் என்.டி.ஆருக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு இருப்பதாக பிரபல […]
- ஆஸ்கர் போட்டியில் ஆர்ஆர்ஆர்ஆர்.ஆர்.ஆர். படத்தில் கொமரம்பீமாக நடித்த ஜூனியர் என்.டி.ஆருக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு இருப்பதாக பிரபல […]
- இறுதிக்கட்ட படபிடிப்பில் நடிகர் சிம்ஹாவின் ‘தடை உடை’சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற நடிகர் சிம்ஹாவின் புதிய திரைப்படமான ‘தடை உடை’ எனும் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 16: புணரின் புணராது பொருளே பொருள்வயிற்பிரியின் புணராது புணர்வே; ஆயிடைச்செல்லினும், செல்லாய்ஆயினும், நல்லதற்குஉரியை- […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் • ஒவ்வொருவருக்கும் சுயமான சிந்தனைகள் தேவை.அடுத்தவர்களின் சிந்தனைகளை கேட்டு நாம் வாழ ஆரம்பித்தால்நம்மால் வாழ்க்கையில் […]
- திண்டுக்கல் சி. சீனிவாசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக கழக பொருளாளரும், முன்னாள் […]
- பொது அறிவு வினா விடைகள்எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் நுரைப்பான் (ஃபோம்மைட்) ஐஸ் தயாரிக்கும் […]
- குறள் 278மனத்தது மாசாக மாண்டார் நீராடிமறைந்தொழுகு மாந்தர் பலர். பொருள் (மு.வ): மனத்தில் மாசு இருக்க, தவத்தால் […]
- ஒரே ஒரு தலைபாகை.. அனைவரது கவனத்தையும் ஈர்த்த பிரதமர் மோடி..!!நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி வித்தியாசமான தலைப்பாகையுடன் வந்து […]