ஆண்டு விழா, பரிசளிப்பு விழா மற்றும் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு – ஊட்டி ஜெ எஸ் எஸ் பார்மசி கல்லூரியில் முப்பெரும் விழா – 2023 நடைபெற்றது.
ஊட்டி ஜே எஸ் எஸ் மருந்தாக்கியல் கல்லூரியில் ஆண்டு விழா, பரிசளிப்பு விழா மற்றும் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு என்ற முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ் பி தனபால் வரவேற்புரையாற்றினார். முனைவர்கள் கே பி அருண் மற்றும் சத்திய நாராயணா ஆகியோர் கல்லூரியின் ஆண்டறிக்கையை வழங்கினார்.


மருந்தியல் துறை தலைவர் டாக்டர் கே கௌதமராஜன் கல்லூரி ஆண்டு மலரான பார்ம சாகா 30 வது தொகுப்பின் சிறப்புகளை பற்றி விளக்கினார். இந்த விழாவில் கல்லூரியின் ஆண்டு மலரான ‘பார்ம சாகா’ மென் நகல் மற்றும் புத்தக வடிவில் வெளியிடப்பட்டது. கேரளா மாநிலம் செருத்துத்தி யில் அமைந்துள்ள பஞ்சகர்மா தேசிய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் டி சுதாகர் தலைமையில் விருந்தினராக கலந்துகொண்டர்.. அவர் தனது தலைமை உரையில் இதுபோன்ற விழாக்கள் முக்கியத்துவத்தையும் மாணவர்கள் தங்களுது எதிர்கால வாழ்வை எடுத்துகொள்ள கொள்ளவேண்டும் எனவும் தனது உரையில் விளக்கினார். விழாவில் கௌரவ விருந்தினராக கலந்துகொண்ட பி எஸ் ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் டி பிருந்தா கல்லூரியில் ஆண்டு விழாக்கள் மற்றும் மாணவர்கள் வாழ்க்கையில் கல்லூரி ஆண்டு விழாக்கள் முக்கியத்துவத்தையும் பற்றியும் கல்லூரியின் தரத்தையும் பேசினார். ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை யின் மருத்துவ இயக்குநர் மருத்துவர் பி பரந்தாமன் கடந்த ஆண்டு கல்லூரி மாணவர்கள் செய்த மருத்துவ , மற்றும் மருந்து சார்ந்த ஆராய்ச்சி கட்டுரைகளின் எண்ணிக்கை பற்றி எடுத்துரைத்தார். அபெக்ஸ் மருத்துவ நிறுவனத்தில் உதவி பொது மேலாளராக பதவி வகிக்கும் கல்லூரியின் முன்னாள் மாணவர் டி ராஜ்குமார் தனது கல்லூரி அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மேலும் மருந்தாக்கியல் மாணவர்களுக்கு மருந்து விற்பனை துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றி விளக்கினார். இந்த விழாவில் மைசூர் .எஸ்.எஸ்.மஹாவித்யாபீட மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர்.ஆர்.மகேஷ் தலைமை உரையாற்றினார்.
நிறைவாக மருந்து வேதியியல் துறையின் தலைவர் டாக்டர் ஆர். காளிராஜன் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில்; கல்வி, ஆராய்ச்சி மற்றும் விளையாட்டு போன்ற பல்வேறு பிரிவுகளில் சிறந்த விளங்கிய மாணவர்களுக்கும் ஆசிரியர்களுகும் பல்வேறு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் சிறப்பு விருந்தினர்கள் வழங்கினார்கள். இந்த முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டது
- மதுரை மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழாமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழா மற்றும் […]
- அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை.?பிரச்சார பயணம்அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை என்ற கோள்வியோடு கன்னியாகுமரி,வேதாரண்யம்,ஓசூர்சென்னை என் நாங்கு […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிமதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உலக வனநாள், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருமங்கலம் நகராட்சி, சித்தர்கூடம்திருமங்கலம் […]
- மதுரை எல்.கே.பி நகர் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் நிகழ்ச்சிமதுரை எல்.கே.பி நகர் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் […]
- சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் திருவிழாசோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் 47 ஆம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது,ஜெனக […]
- இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்… சாமி பட வில்லன் நடிகர் பரபரப்பு வீடியோ..!!சாமி பட வில்லன் நடிகர் கோட்ட சீனிவாச ராவ் நான் சாகல இன்னும் உயிரோடு தான் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம்மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதி ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை […]
- யுகாதி தினத்தை முன்னிட்டு பஞ்சாங்க படனம்தெலுங்கு வருடப்பிறப்பு யுகாதியை முன்னிட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் அக்ரகாரம் சந்தான கோபாலகிருஷ்ணன் கோவிலில் வரதராஜ் […]
- டெல்லியில் நிலநடுக்க அனுபவம் நடிகை குஷ்பு பரபரப்பு ட்விட்ஆப்கானிஸ்தானில் எற்பட்ட நிலநடுக்கம் டெல்லியில் உணரப்பட்ட நிலையில், தான் உணர்ந்ததாக தமது ட்விட்டரில் நடிகை குஷ்பு […]
- ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றம்திருப்பி அனுப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றி மீண்டும் ஆளுனருக்கு […]
- பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்…..விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை பறிமுதல் செய்த […]
- ஓராண்டில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் புது சாதனை!உலக வன தினம் நேற்று முன் தினம் கொண்டாடப்படும் நிலையில் சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் […]
- லைஃப்ஸ்டைல்வெல்லம் சேர்த்த இஞ்சி டீயின் நன்மைகள்:
- விழுப்புரத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!விழுப்புரத்தில் நேற்று திடீரென ஆலங்கட்டி மழை பெய்தததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 143: ஐதே கம்ம யானே ஒய்யெனதரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்துஓரை […]