ஆசிய விளையாட்டின் ஒரு பகுதியாக கலப்பு இரட்டையர் வில்வித்தை போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
இறுதிப்போட்டியில் இந்தியா – தென்கொரியா அணிகள் மோதின. ஆரம்பம் முதலே மிகவும் பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் 159 – 158 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி இந்தியா கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்றத
இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஆசிய விளையாட்டு போட்டியில் 16வது தங்கப்பதக்கத்தை வென்றது. தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியில் ஜோதி சுரேகா, பிரவீன் ஓஜாஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.